Main Menu

குவாதமாலாவில் இடம்பெற்ற கோரவிபத்து: 21 பேர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

மத்திய அமெரிக்க நாடான குவாதமாலாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அத்துடன் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

குவாதமாலாவின் வடகிழக்கு பீட்டன் பகுதியில் இருந்து தலைநகர் நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து, குவாதமாலா நகரில் இருந்து கிழக்கே 150 கி.மீ. தொலைவில் கவுலான் நகராட்சிப் பகுதியில் சென்றபோது பேருந்தின் பின்பகுதி லொறி ஒன்றுடன் வேகமாக மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டது.

இக்கோர விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 18 வயதுக்கு உட்பட்ட 9 பேரும் உள்ளடங்குகின்றனர்.

தகவலறிந்து அங்கு சென்ற மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை அந்நாட்டுப் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகிறது.

பகிரவும்...