Main Menu

காசநோயால் பாதிக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இந்தியா முழுவதும், காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 23 இலட்சமாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக வெளியான புள்ளி விபரத்தின்படி, நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4 இலட்சத்து 70 ஆயிரம் பேருக்கு காசநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பட்டியலில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது. கடந்தாண்டு ஒரு இலட்சத்து 8 ஆயிரம் பேர் தமிழகத்தில் காசநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை காசநோயை குணப்படுத்தும் விகிதம் உயர்வடைந்து வருவதாகவும், புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென்ற இலக்குடன் செயல்பட்டு வருவதாகவும், சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பகிரவும்...