Main Menu

தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கையை 40 ஆக அதிகரிக்க தீர்மானம்?

தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கையை 40 ஆக அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் 32 ஆக இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 37 ஆக அதிகரிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

பெரிய மாவட்டமாக இருந்த வேலூரை பிரித்து புதிதாக திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உதயமானது.

இதன் தொடர்ச்சியாக, புதிதாக உருவான மாவட்டங்களின் நிர்வாகப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டு ஆட்சியர்கள், எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் புதிதாக மேலும் மூன்று மாவட்டங்களை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான, சேலம் மாவட்டத்தில் இருந்து எடப்பாடியை தனி மாவட்டமாக உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பகிரவும்...