Main Menu

ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்க படையினர் உயிரிழப்பு!

ஈராக்கிலுள்ள அமெரிக்க படையினரின் தளங்களை இலக்குவைத்து ஈரானினால் மேற்கொள்ளப்பட்ட 15 ஏவுகணை தாக்குதல்களில் 80 அமெரிக்க படையினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரான் அரச தொலைக்காட்சி இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் புரட்சிகர காவல்படையணியை மேற்கோள்காட்டி இந்த தகவலை ஈரானின் அரச தொலைக்காட்சி வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

15 ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாகவும் அதில் ஒன்று கூட இடைமறித்து சுட்டுவீழ்த்தப்படவில்லை எனவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் அமெரிக்க ஹெலிக்கொப்டர்கள் இராணுவ தளபாடங்கள் சேதமடைந்துள்ளதாக ஈரானின் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

மேலும் 100 இலக்குகளை இனம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ள ஈரான் அமெரிக்கா பதில் தாக்குதலை மேற்கொண்டால் அந்த இலக்குகள் தாக்கப்படலாம் என தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின்படி, அண்மையில் பாக்தாத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஈரானின் முக்கிய தளபதி காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...