Main Menu

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கொரோனா

கர்நாடக முதலமைச்சரும் பா.ஜ.க.மூத்த தலைவருமான எடியூரப்பாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,  “எனது உடல்நிலை சீராக இருக்கின்றது. மருத்துவர்களின் அறிவுறுத்தலை ஏற்று முன்னெச்சரிக்கையாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன்.

அத்துடன் அண்மையில் என்னை சந்தித்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எடியூரப்பா தனது குடும்பத்துடன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்த நிலையில், நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...