Main Menu

ஐப்பானில் பயங்கர தீ விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு!

ஐப்பானில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது.

ஜப்பானின் கியோட்டோவிலுள்ள அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றிலேயே இன்று(வியாழக்கிழமை) காலை இந்த தீ விபத்து ஏற்பட்டது.

அதில் ஆரம்பத்தில் 12 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் பலரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகின்றது.

ஐப்பானில் பயங்கர தீ விபத்து – 12 பேர் உயிரிழப்பு 40 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்!

ஐப்பானில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பானின் கியோட்டோவிலுள்ள அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றிலேயே இன்று(வியாழக்கிழமை) காலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சந்தேக நபர் ஒருவர் குறித்த கட்டடத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து தீ வைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது காயமடைந்த அடையாளம் தெரியாத குறித்த சந்தேக நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த தீ விபத்து காரணமாக கியோட்டோவிலுள்ள அனிமேஷன் ஸ்டுடியோ அமைந்துள்ள மூன்று மாடிக்கட்டம் பலத்த சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில் கட்டடத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்குரிய நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தீயணைப்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் பலரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகின்றது.

பகிரவும்...