Day: July 18, 2019
பெருவின் முன்னாள் ஜனாதிபதி கைது!
பெருவின் முன்னாள் ஜனாதிபதி அலெஜன்ட்ரோ டொலிடோ அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். பெரு அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குற்றவாளிகளை மீள ஒப்படைக்குமாறு பெரு அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் கேட்டுக் கொண்டதற்கமைய பெருவின் முன்னாள் ஜனாதிபதி கைதுமேலும் படிக்க...
ஐப்பானில் பயங்கர தீ விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு!
ஐப்பானில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. ஜப்பானின் கியோட்டோவிலுள்ள அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றிலேயே இன்று(வியாழக்கிழமை) காலை இந்த தீ விபத்து ஏற்பட்டது. அதில் ஆரம்பத்தில் 12 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில்,மேலும் படிக்க...
வவுனியாவில் டிப்பர் மோதி இளைஞன் படுகாயம்
வவுனியா – திருநாவற்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணியளவில் தாண்டிக்குளத்தில் இருந்து குருமண்காட்டை நோக்கி சென்ற டிப்பர் வாகனம் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது நல்லலிங்கம் உசாந்தன்மேலும் படிக்க...
சோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை – பிரதமர்
அமெரிக்காவுடனான உத்தேச படைகளின் அந்தஸ்து (சோபா) ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் தெரிவித்துள்ளார். சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று (புதன்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்மேலும் படிக்க...
தமிழகத்தின் உள்ளூராட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான அறிவிப்பு ஒக்டோபர் மாதத்தின் இறுதிக்குள் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து தமிழக மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்தவகையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.கவின் தமிழக தலைவர்மேலும் படிக்க...
தேசத்துரோக வழக்கு – வைகோவிற்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு!
தேசத்துரோக வழக்கில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவிற்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை விசாரணை முடியும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேச துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து வைகோ, மேன்முறையீடு செய்திருந்த நிலையில், குறித்த மேன்முறையீட்டு மனு இன்றுமேலும் படிக்க...
நல்லூர் கந்தசுவாமி ஆலத்தின் வருடாந்தத் திருவிழா
வரலாற்று புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலத்தின் வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் சிறப்பாக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா தொடர்பாக உண்மைக்கு மாறான பல செய்திகள் பரவிவரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு ஆலய தர்மகர்தாவின்மேலும் படிக்க...