Main Menu

எரிபொருள் பிரச்சினை காரணமாக பேருந்து சேவைகளை 50 சதவீதத்தினால் குறைக்க வேண்டிய நிலை!

எரிபொருள் பிரச்சினை காரணமாக பேருந்து சேவைகளை 50 சதவீதத்தினால் குறைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரட்ண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

டீசல் இல்லாவிட்டால், பெரும்பாலும் நாளை(திங்கட்கிழமை) முதல் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பேருந்து பயணங்களை 50 சதவீதமாகக் குறைத்து சேவை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், சலுகைகளை வழங்க வேண்டும் எனவும் அவர் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பகிரவும்...