Main Menu

எட்டு வழிச் சாலை திட்டம் குறித்த வழக்கு விசாரணை இன்று!

சேலம் தொடக்கம் சென்னை வரையான எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மத்திய- மாநில அரசுகள் பிறப்பித்த அறிவிப்பு மற்றும் அரசாணை ஆகியவற்றை சென்னை உயர்நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

இதனைத்தொடர்ந்து  சாலை திட்ட இயக்குனர் மற்றும் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்ற திட்ட அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று அருண்மிஸ்ரா அமர்வு முன்பு கடந்தவாரம் விசாரணைக்கு வந்தது.

எதிர் மனுதாரர் மனுவை ஒத்திவைக்கும்படி வாதாடியதன் அடிப்படையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...