Main Menu

உலக நாடுகள் அவசரப்பட்டு முடக்கநிலையை தளர்த்துவதை தவிர்க்க வேண்டும்: WHO வேண்டுகோள்

உலக நாடுகள் அவசரப்பட்டு முடக்கநிலையை தளர்த்துவதை தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

ஜெனீவாவில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமான ஐ.நா.வின் முக்கிய அமைப்பான உலக சுகாதார அமைப்பின் 73ஆவது கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“உலக நாடுகளிடம் நான் கேட்டுகொள்வதெல்லாம், கொரோனா வைரஸால் எளிதில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அந்த வைரஸின் ஆபத்தை எதிர்த்து நாம் நீண்டகாலம் பயணிக்க வேண்டியுள்ளது. ஆதலால் உலக நாடுகள் அவசரப்பட்டு முடக்கநிலையை தளர்த்துவதை தவிர்க்க வேண்டும்

கொரோனா வைரஸ் ஆபத்தான எதிரி, ஆபத்தான அம்சங்களின் கலவையுடன் கொரோனா இருக்கிறது. இந்த வைரஸ் மிகவும் திறன்மிக்கது, வேகமாகப் பரவக்கூடியது, உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடியது.

கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் மக்கள் தொகையில் அதிக நோய்எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் 20 சதவீதத்துக்கு மேல் இல்லை, பெரும்பலான இடங்களில் 10 சதவீதத்துக்கும் மேல் இல்லை. இன்னும் விளக்கமாகக் கூறினால், உலக மக்கள் தொகையில் பெரும்பாலோனோர் இந்த வைரஸின் தாக்குதலுக்கு எளிதில் பாதிக்கப்படுகிறார்கள்” என கூறினார்.

பகிரவும்...