லெபனானில் பேரவலம்: லட்சக் கணக்கானோர் இடம்பெயர்வு
லெபனானில் தீவிரமடைந்த மோதல் காரணமாக சுமார் 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐ.நா. அகதிகள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
லெபனானின் மொத்த சனத்தொகையில் ஐந்து ஒரு பங்கினர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளமை அவல நிலையின் தீவிரத்தை உணர்த்துகிறது என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, லெபனானுக்கு சர்வதேச சமூகம் அவசரகால நிதி மற்றும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு பிறகு ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக லெபனானில் இஸ்ரேல் நடத்திய உக்கிர தாக்குதலில் இதுவரை 2,100 இற்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
