Main Menu

ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை – முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் அழைப்பு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பாக ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தனிப்பட்ட முறைப்பாட்டின் சந்தேக நபராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பெயரிட நீதவான் திலின கமகே தீர்மானித்தார்.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட திருத்தந்தை. சிறில் காமினி பெர்னாண்டோ மற்றும் ஜேசுராஜ் கணேசன் ஆகியோர் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக மரணத்திற்கு காரணமான குற்றவியல் சட்டத்தின் 298வது பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி தனிப்பட்ட முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்செகுலரத்ன, சட்டத்தரணிகளான தேஜித கோரலகே, உதார முஹந்திரம்கே மற்றும் திலின புஞ்சிஹேவா ஆகியோர் முறைப்பாட்டாளர்கள் சார்பில் ஆஜராகியிருந்தனர்.

பகிரவும்...