Main Menu

இந்தியாவுக்கு மற்றொரு துயரம்: இரண்டு மாதத்தில் இரு பெரும் தலைவர்களை இழந்தது

டில்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

முன்னாள் மத்திய நிதியமைச்சரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான 66 வயதான அருண் ஜெட்லி, கடும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 9ஆம் திகதி காலை டில்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு, சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இதயம் மற்றும் சிறுநீரக சிறப்பு வைத்தியர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இதனிடையே, அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார். 

பகிரவும்...