Main Menu

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்- மூவர்ண கொடியேற்றி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு, டெல்லி- செங்கோட்டையில் மூவர்ண கொடியேற்றி, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்கு முன்னர் பிரதமர், மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று  மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் டெல்லி- செங்கோட்டைக்கு வருகைதந்த பிரதமர் நரேந்திர மோடியை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் அஜய் பட், பாதுகாப்புத் துறை செயலாளர் வைத்தியர் அஜய் குமார் ஆகியோர் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி,  மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதன்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

மேலும்  தேசியக்கொடி ஏற்றும் போது முதல் முறையாக இரு விமான படை விமானங்கள்  ஊடாக மலர்கள்  தூவப்பட்டன.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள், முப்படைகளின் தலைவர்கள், உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...