Main Menu

அ.ம.மு.க. பாதி அழிந்துவிட்டது – புகழேந்தி

மண்டல பொறுப்பாளர்களால் அ.ம.மு.க. பாதி அழிந்துவிட்டது என அ.ம.மு.க. முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோவையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர், “நிர்வாகிகள் நீக்கப்பட்டதில் அநீதி நிகழ்ந்திருக்கிறது. மண்டல பொறுப்பாளர்களால் இந்த இயக்கம் பாதி அழிந்து விட்டது. மாற்று நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். 42 தொகுதியை ஒரே நிர்வாகி கவனித்தால் கட்சியை எப்படி நடத்த முடியும்?

நான் எந்த கட்சிக்கும் போவதாக இல்லை. அதுபோன்ற முடிவை நான் எடுக்கவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக புத்தகம் வெளியிட உள்ளேன். அதில் பல உண்மைகள் வெளிவரும். நான் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன். தேசத்துரோக வழக்கு, வருமான வரி சோதனை போன்றவற்றை சந்தித்து வருகிறேன்.

தினகரன் மனசாட்சிபடி நடந்து கொள்ள வேண்டும். அ.ம.மு.க.வில் இருந்து அ.தி.மு.க.விற்கு செல்பவர்கள் எந்த பொறுப்பும் கொடுக்கப்படாமல் அரசியல் நம்பிக்கையற்றவர்களாக மாறி விடுகிறார்கள்” என மேலும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...