Main Menu

அரையிறுதிக்கு செல்லும் அணி எது? இலங்கை- தென்னாபிரிக்க ஜாம்பவான் அணிகள் மோதல்!

வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், இரண்டாவது அரையிறுதிப் போட்டி, இரசிர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராய்பூர் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை ஜாம்பவான்கள் அணியும் தென்னாபிரிக்கா ஜாம்பவான்கள் அணியும் மோதவுள்ளன.

இப்போட்டியில் இலங்கை ஜாம்பவான்கள் அணிக்கு டில்சானும், தென்னாபிரிக்கா ஜாம்பவான்கள் அணிக்கு ஜோன்டி ரோட்சும் தலைமை தாங்கவுள்ளனர்.

இரு அணிகளுக்கிடையில், முன்னதாக நடைபெற்ற லீக் போட்டியில், இலங்கை ஜாம்பவான்கள் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இப்போட்டியில் வெற்றிபெறும் அணி, 21ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், இந்தியா அணியை எதிர்கொள்ளும்.

பகிரவும்...