Main Menu

அரசியலுக்கு வரும் நோக்கமே இருந்ததில்லை – மோடி

அரசியலில் நுழையும் நோக்கம் தனக்கு எப்போதுமே இருந்ததில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,   அரசியலில் நுழையும் நோக்கம் எனக்கு எப்போதுமே இருந்ததில்லை. ஆனால் அரசியலின் ஒரு பகுதியாக தற்போது மாறிவிட்ட நிலையில் என்னால் இயன்ற வரை மக்களுக்கு சிறப்பாக பணியாற்றி வருகிறேன்.

அயோத்தி தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்பது புதிய நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகள் நிறைந்த ஒரு தீர்வு ஆகும்.

ஒருபுறம்இ நீடித்த சட்டப் போர் முடிவுக்கு வந்துவிட்டது. மறுபுறம் நீதித்துறை மீதான மரியாதை நாட்டில் வளர்ந்துள்ளது. உண்மையான அர்த்தத்தில் இந்த தீர்ப்பு நம் நாட்டில் நீதித்துறைக்கு ஒரு மைல்கல்லாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு வழங்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு மக்கள் காட்டிய முதிர்ச்சிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

பகிரவும்...