Main Menu

ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி மோதலில் 28 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கி மோதலில் 24 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 2 இராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானின் தர்சாப் மாவட்டத்தில் தீவிராவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஆப்கான் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கையின் போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்ததாக ஆப்கான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் பொது மக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் உயிரிழந்த தீவிரவாதிகளில் 8 பேர் தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்படிருப்பதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இது குறித்து தலிபான் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

பகிரவும்...