Main Menu

அண்ணா பல்கலையின் புதிய துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் ஆர்.வேல்ராஜை நியமித்துள்ளார்.

குறித்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த எம்.கே.சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 11ஆம் திகதியுடன் நிறைவு பெற்றது.

அதனைத் தொடர்ந்து  புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கு சென்னை பல்கலை.முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை.துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷீலா ராணி சுங்கத் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

குறித்த குழுவினால்  இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பேரின் விபரங்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான முனைவர் ஆர்.வேல்ராஜை, அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக  தமிழக ஆளுநர் நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...