உலகம்
கடும் எதிர்ப்புக்கு இடையே மியான்மர் வந்தார் சீன வெளியுறவு மந்திரி
சீனா தலைமையிலான லங்காங்-மெகாங் ஒத்துழைப்பு குழு கூட்டம் மியான்மர் நாட்டில் உள்ள பாகன் நகரில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மீகாங் டெல்டா பகுதி நாடுகளான மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் இந்தக்மேலும் படிக்க...
லிபியா பாராளுமன்றத்துக்கு தீ வைப்பு – ஐ.நா. கண்டனம்
ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அதிபர் கடாஃபியின் மறைவுக்குப் பிறகு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. தற்போதைய அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, டாப்ரக் நகரில் உள்ள லிபிய பாராளுமன்றத்தைச் சூறையாடிய மக்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குமேலும் படிக்க...
அனைத்து மதங்களையும் பரஸ்பரம் மதிக்க வேண்டும் – ஐ.நா. சபை வலியுறுத்தல்
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கன்னையா லால் என்ற தையல்காரரை ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகியோர் கொலை செய்து, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால், உதய்பூரில் கலவரம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுபற்றியும்,மேலும் படிக்க...
பாகிஸ்தானில் தொடர் மின்வெட்டு: மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்
நிதி நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தானில் கடுமையான மின்பாற்றக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் ஒரு நாளில் 12 முதல் 14 மணி நேரம்மேலும் படிக்க...
உக்ரைன் நாட்டில் வணிக வளாகம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்- 16 பேர் உயிரிழப்பு, 59க்கும் மேற்பட்டோர் காயம்
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மத்திய உக்ரைன் நகரமான கிரெமென்சுக் பகுதியில் உள்ள வணிக வளாகம் மீது ரஷிய படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளனர்.மேலும் படிக்க...
ஜோர்டனில் ரசாயன டாங்க் வெடித்து விபத்து- நச்சு வாயு கசிவால் 12 பேர் உயிரிழப்பு
ஜோர்டனின் அகபா துறைமுகத்தில் உள்ள ஒரு கப்பில் கிரேன் மூலம் குளோரின் டாங்குகள் ஏற்றப்பட்டது. அப்போது, திடீரென கிரேன் செயலிழந்ததை அடுத்த, ஒரு குளோரின் டாங்க் மேலிருந்து விழுந்து வெடித்தது. இதில், பெரியளவில் மஞ்சள் நச்சு புகை வெளியேறியது. இதனால், இந்தமேலும் படிக்க...
உக்ரைன்- மோல்டோவா நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து!
உக்ரைன் மற்றும் மோல்டோவா ஆகிய இரு நாடுகளுக்கும் ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய சபையின் தலைவர் சார்லஸ் மைக்கேல் அறிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் நேற்று (வியாழக்கிழமை) நடந்த உச்சிமாநாட்டின் போது குழுவின் 27 தலைவர்களால் இது அங்கீகரிக்கப்பட்டது. இதுகுறித்து ஐரோப்பியமேலும் படிக்க...
கொரோனா அதிகரிப்பு- குடியிருப்பு பகுதிகளுக்கு சீல் வைத்தது சீனா
கொரோனா முதன்முறையாக பரவிய சீனாவில் கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்நாட்டில் மொத்தம் 2,25,487பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீனாவின் தென் கடற்கரை நகரமான மக்காவ்வில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதை அடுத்து அங்குள்ள 12க்கும் மேற்பட்ட குடியிருப்புமேலும் படிக்க...
சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக குரங்கு அம்மை நோய் பாதிப்பு அறிவிப்பு!
குரங்கு அம்மை நோய் பாதிப்பை, சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த தொற்றுநோய் குறிப்பிட்ட ஒரு நாடு அல்லது பிராந்தியத்திற்கு மட்டும் பரவக்கூடியதல்ல என்பது தெளிவாகிறது. சமூகப் பரவல் எங்கு நடந்தாலும் உடனடிமேலும் படிக்க...
பாகிஸ்தானுடன் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்- ரஷிய தூதர் மறுப்பு
இலங்கையை போன்று பாகிஸ்தானும் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் கடன் பிரச்சினை காரணமாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் உள்பட எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான பேச்சுவார்த்தையை ஷபாஸ்மேலும் படிக்க...
தடுப்பூசி கண்டு பிடிக்கப் பட்டதால் 2 கோடி உயிர் இழப்புகள் தடுக்கப் பட்டன- உலகம் முழுவதும் நடந்த ஆய்வில் கண்டுபிடிப்பு
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டில் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவியது. கொரோனாவின் அறிகுறிகள் மற்றும் அதனை தடுப்பதற்கான மருத்துவ முறைகளை வல்லுனர்கள் கண்டுபிடிக்கும் முன்பு இந்நோய் பலரை பலிவாங்கி விட்டது. அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து என அனைத்துமேலும் படிக்க...
பொருளாதார தடைகள் பூமராங் போன்றவை: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்!
உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளுக்கு சீனா ஜனாதிபதி ஸி ஜின்பிங் கண்டனம் தெரிவித்துள்ளார். சீனா, ரஷ்யா, பிரேஸில் மற்றும் இந்தியா, உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள பிரிக்ஸ் அமைப்பின் வர்த்தக மன்ற கூட்டத்தின் போது உரையாற்றுகையிலேயேமேலும் படிக்க...
உக்ரைன்- மோல்டோவா நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து?
ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டின் போது, உக்ரைன் மற்றும் மோல்டோவா ஆகிய நாடுகளை வேட்பாளராக 27 உறுப்பு நாடுகளும் அங்கீகரிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் மாநாடு இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகின்றது. இதன்போது,மேலும் படிக்க...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 2 மாதம் நீடிக்கும் அறிகுறி- ஆய்வில் தகவல்
கொரோனாவின் அடுத்தடுத்த அலைகள் தொடர்ந்து உருவாகி கொண்டே இருக்கின்றன. தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், தொற்றின் வீரியம் குறைவாக உள்ளது. அதே நேரம் கொரோனா உருமாறி புதிய வகைகளில் பரவி கொண்டே தான்மேலும் படிக்க...
லெபனானிலும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டுபிடிப்பு
ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20-க்குமேலும் படிக்க...
முன்கூட்டியே தேர்தலை நடத்தாவிட்டால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – இம்ரான்கான்
அன்னியச் செலாவணி கையிருப்பு குறைவு, அதிக அளவு பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதார சவால்களை பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தானில் புதிய அரசு பதவிக்கு வந்த பிறகு 3-வது முறையாக பெட்ரோல் விலையை உயா்த்தியது. அங்கு நிலவி வரும் பணவீக்கத்திற்கு எதிராக முக்கியமேலும் படிக்க...
பாகிஸ்தான் சிறையிலிருந்த இந்திய மீனவர்கள் 20 பேர் வாகா எல்லையில் ஒப்படைப்பு
இந்திய எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 20 பேரை 2018, ஜூன் மாதம் பாகிஸ்தான் கடற்படையினர் சிறை பிடித்துச் சென்று கராச்சி சிறையில் அடைத்து வைத்துள்ளனர். இதற்கிடையே, பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்ததாகக்மேலும் படிக்க...
எத்தியோப்பியாவில் அம்ஹாரா இனக் குழுவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை!
எத்தியோப்பிய கிளர்ச்சிக் குழுவொன்று அம்ஹாரா இனக்குழுவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை படுகொலை செய்துள்ளது. அதிகாரிகள் மற்றும் செய்தி அறிக்கைகளின்படி, ஆபிரிக்காவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் உள்நாட்டுப் போருக்கு மத்தியில் பதிவான சமீபத்திய கொடூர படுகொலையாக இது பார்க்கப்படுகின்றது.மேலும் படிக்க...
எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும் நட்பு நாடுகள் உக்ரைனைக் கைவிட்டு விடக்கூடாது: நேட்டோ பொதுச் செயலர்!
எவ்வளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும், நட்பு நாடுகள் உக்ரைனைக் கைவிட்டுவிடக்கூடாது என என நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் தெரிவித்துள்ளார். ஜேர்மனி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உக்ரைன் போர் எவ்வளவுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- …
- 121
- மேலும் படிக்க