உலகம்
தைவானின் ஜனநாயக பாதுகாப்புக்கு அமெரிக்கா இரும்பு கவசம்போல் துணை நிற்கும் – நான்சி பெலோசி
அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அரசுமுறை பயணமாக தைவான் சென்றார். தைவானை தங்கள் நாட்டின் ஓர் அங்கம் எனக்கூறி வரும் சீனா, நான்சியின் இந்தப் பயணத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நான்சியின் இந்த பயணத்திற்கு அமெரிக்கா மிகப்பெரிய விலையைமேலும் படிக்க...
தாய்வானின் பல்வேறு நிறுவனங்களுக்கு எதிராக சீனா பொருளாதாரத் தடை!
சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவர் நான்சி பெலோசியை வரவேற்றுள்ள தாய்வானின் பல்வேறு நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை மற்றும் இறக்குமதிக்கான தடையை சீனா விதித்துள்ளது. பட்டாசுகள், நூடுல்ஸ், வேகவைத்த பொருள்கள் மற்றும் இனிப்புகளை உற்பத்தி செய்யும்மேலும் படிக்க...
கொரோனா பாதித்தவர்களுக்கு நரம்பியல் பிரச்சினைகள் ஏற்படும்- ஆய்வில் தகவல்
கொரோனா தொற்றின் பின் விளைவுகள் தொடர்பாக அமெரிக்காவின் ஹூஸ்டண் மெத்தடிஸ்ட் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஜாய் மித்ரா, முரளிதர் எல்.ஹெக்டே தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.அந்த ஆய்வின் முடிவில் கூறியிருப்பதாவது:- கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு நீண்டகால மீள இயலாத நரம்பியல் பாதிப்புகள்மேலும் படிக்க...
அல்-கொய்தா தலைவர் நடமாட்டத்தை காட்டிக்கொடுத்த பாகிஸ்தான் அரசு?
அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மூலம் கொல்லப்பட்ட அல்-ஜவாஹிரி ஆப்கானிஸ்தானின் காபூல் புறநகர் பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முழுமையாக வெளியேறியது. இந்த நிலையில் அந்நாட்டில் அமெரிக்க ராணுவத்தின் எந்தமேலும் படிக்க...
அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் உயிரிழப்பு
அல்-கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தனது படைகள் அவரைக் கொன்றதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். 71 வயதுடைய அல்-கொய்தா தலைவர் ஆப்கானிஸ்தானின் காபூலில் பாதுகாப்பான வீட்டில் இருந்தபோது அமெரிக்கப்மேலும் படிக்க...
ஆபிரிக்காவுக்கு வெளியே முதல் குரங்கு அம்மை உயிரிழப்பு பதிவானது!
ஆபிரிக்காவுக்கு வெளியே முதல் குரங்கு அம்மை உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதன்படி, பிரேஸில் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் குரங்கு காய்ச்சலுக்கு முதல் மரணம் ஏற்பட்டுள்ளது. பிரேஸிலில் 41 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேபோல, ஸ்பெயின் அதன் முதல் மரணத்தை அறிவித்தது. இதுமேலும் படிக்க...
மியன்மாரில் நான்கு அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
மியன்மாரில் சமூக செயற்பாட்டாளர், முன்னாள் நாடாளுமன்ற உள்ளிட்ட நால்வருக்கு ஆளும் இராணுவம் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. மியன்மாரில் ஆங் சான் சூக்கி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஆட்சியில் உள்ள இராணுவத்தினர் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நான்கு பேருக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.மேலும் படிக்க...
கென்யாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30 பேர் பலி
ஆப்பிரிக்க நாடான கென்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள மெரு நகரில் இருந்து கடற்கரை நகரமான மொம்பாசாவுக்கு நேற்று முன்தினம் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று பயணம் மேற்கொண்டது. மெரு-நைரோபி நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுபாலம் மீது அந்த பேருந்து சென்று போதுமேலும் படிக்க...
தானிய ஏற்றுமதியை கடல் வழியாக மீண்டும் தொடங்க அனுமதிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது
உக்ரைனும் ரஷ்யாவும் தானிய ஏற்றுமதியை கடல் வழியாக மீண்டும் தொடங்க அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ‘கண்ணாடி’ ஒப்பந்தம் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், தற்போது உக்ரைனில் போரினால் சிக்கியுள்ள மில்லியன் கணக்கான டன் தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும். ரஷ்யாவின் பெப்ரவரிமேலும் படிக்க...
உலக உணவு நெருக்கடி தீரும் சாத்தியம்: ரஷ்யாவுடன் உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தம்
கருங்கடல் வழியாக உக்ரைன் தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது. துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இன்று (வெள்ளிக்கிழமை) உக்ரைன், ரஷ்யா, துருக்கி மற்றும் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.மேலும் படிக்க...
பிரேசிலில் குடிசை பகுதியில் புகுந்து 18 பேர் சுட்டுக்கொலை
பிரேசிலியின் முக்கிய நகரமான ரியோடி-ஜெனிரோவின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு குடிசை பகுதியில் கனரக வாகனங்களில் செல்லும் பொருட்கள் திருட்டு போன்ற குற்றசெயல்களில் ஈடுபடுபவர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து 400-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அங்கு வாகனங்களில் விரைந்துமேலும் படிக்க...
உணவு நெருக்கடியை தீர்க்க ரஷியா மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும்- புதின் அறிவுறுத்தல்
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போரை தொடங்கியது. தற்போது வரை அந்த நாடு மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், ரஷியா மீது ஏராளமான பொருளாதாரமேலும் படிக்க...
வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்புங்கள்… அமெரிக்காவிடம் உக்ரைன் அதிபரின் மனைவி வேண்டுகோள்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலனா ஜெலன்ஸ்கா இன்று அமெரிக்க பாராளுமன்றத்தில் எம்.பி.க்களிடையே உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது:- எதிரிகளை எதிர்த்து போராடவும் லட்சக்கணக்கான உக்ரைன் மக்களை பாதுகாக்கவும் அமெரிக்கா எங்களுக்கு ஏற்கனவே நிறைய உதவி செய்துள்ளது. இந்த போராட்டத்தில் அமெரிக்காமேலும் படிக்க...
உக்ரைனில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5000-ஐ தாண்டியது – ஐ.நா. தகவல்
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 150-வது நாளை நெருங்கி வருகிறது. இந்த போர் உலக அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரினால் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்டமேலும் படிக்க...
ஏலத்திற்கு வரும் ஹிட்லரின் கைக்கடிகாரம்
அடால்ப் ஹிட்லருக்கு சொந்தமானது என்று கூறப்படும் கைக்கடிகாரம் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த “தங்க ஆண்ட்ரியாஸ் ஹூபர் ரிவர்சிபிள்” கைக்கடிகாரம் சுமார் 2-4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலை போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில்மேலும் படிக்க...
சீனாவில் கடும் வெப்பம் அலை எச்சரிக்கை: 90 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்பு
சீனாவில் கொரோனா பெருந்தொற்றால் அந்நாட்டின் பல பகுதிகள் சமீபத்தில் பெரும் பாதிப்புகளை சந்தித்தன. இந்நிலையில், சீனா முழுவதும் ஜூன் 13ந்தேதியில் இருந்து கடுமையான வெப்ப அலைகள் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கின. இந்த வெப்ப அலைகள் தொடர்ந்து, ஆகஸ்டு மாதம் 2வது வாரம்மேலும் படிக்க...
பாகிஸ்தான் இடைத்தேர்தல் – இம்ரான்கான் கட்சி அபார வெற்றி
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சட்டசபை இடைத்தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்து, வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் வெளியானது. இந்நிலையில், சட்டசபைமேலும் படிக்க...
உக்ரைனில் ரஷியா மீண்டும் ஏவுகணை தாக்குதல்- குழந்தைகள் உள்பட 23 பேர் பலி
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி 5 மாதங்களை கடந்துவிட்டது. ஆனால் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷியாவின் மும்முனை தாக்குதலுக்கு உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. இருந்தபோதிலும் உக்ரைன் வீரர்கள் அசராமல் எதிர்த்து போரிட்டு வருவதால் இன்னும் சிலமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- …
- 121
- மேலும் படிக்க