இந்தியா
நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை- தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் யார்- யாரை ஈடுபடுத்த வேண்டும்? ஓட்டு எண்ணும் மையங்களுக்கு வெளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் போலீசார் யார்- யார் என்பது பற்றிய பட்டியல் தயாராக உள்ளது. தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகமேலும் படிக்க...
40 வயதுக்காரருக்கு ஆக்சிஜன் படுக்கையை விட்டுக் கொடுத்து உயிரை விட்ட முதியவர்
நாராயண் தபால்கரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவரை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அப்படி இருந்தும் விடாப்பிடியாக வற்புறுத்தி டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். காடு வா வா என்று அழைக்கும் வயதிலும் எதையும் விட்டுக்கொடுக்க பெரும்பாலானவர்களுக்கு மனம் வராது. ஆனால் தான்மேலும் படிக்க...
ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக நாளை போராட்டம்
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (வியாழக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31ஆம் திகதி வரை ஒக்ஸிஜன் தயாரிக்கலாம் என்றும் ஒக்ஸிஜன் தயாரிக்க பிறப்பித்த உத்தரவு ஜூலைமேலும் படிக்க...
கொரோனா அச்சுறுத்தல் – இந்தியாவிற்கு உதவிக் கரம் நீட்டும் சர்வதேச நாடுகள்!
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அங்குள்ள வைத்தியசாலைகளில் உயிர்வாயுக் கலன்கள், சுவாசக் கருவிகள், மருத்துவப் பொருட்களுக்கு பாரியளவில் தடுப்பாடு நிலவுகின்றது. இந்தநிலையில் பல்வேறு சர்வதேச நாடுகளும் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. அமெரிக்கா கொரோனா தடுப்பூசியினைமேலும் படிக்க...
24 மணி நேரத்தில் 3.60 லட்சம் பேருக்கு தொற்று… இந்தியாவில் தொடர்ந்து உச்சமடையும் கொரோனா
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றுமேலும் படிக்க...
எந்த தயக்கமும் இல்லாமல் தடுப்பூசி போடுங்கள்- கமல்ஹாசன்
அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்று வரும் பொறுப்பை வீட்டில் இருக்கும் இளைஞர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது.மேலும் படிக்க...
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி- தமிழக அரசு அனுமதி
ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.சென்னை: ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதத்துக்கு மட்டும் ஆக்சிஜன் தயாரிக்க தற்காலிகமாக அனுமதிப்பதாக அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்மேலும் படிக்க...
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் வெற்றியை கொண்டாட தடை
ஓட்டு எண்ணிக்கையின்போதும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் அரசியல் கட்சியினர் நடந்து கொள்வது தொடர்பான சில கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணைகளில் சென்னை ஐகோர்ட்டுமேலும் படிக்க...
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு – புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில், தமிழகத்திலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. எனவேமேலும் படிக்க...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கொடுக்கலாம்- தலைவர்கள் கருத்து
அவசர தேவை கருதி ஸ்டெர்லைட்டின் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கலாம் என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூறின. கொரோனா தொற்று 2-ம் அலை நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.மேலும் படிக்க...
தமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பாதீர்- பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் திரவ ஆக்சிஜனை ஆந்திராவிற்கு அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் திருப்பி விடப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிமேலும் படிக்க...
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு: சாலைகள் வெறிச்சோடின- மக்கள் வீடுகளில் முடக்கம்
சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.மேலும் படிக்க...
தமிழ் மொழியைத் திட்டமிட்டுப் புறக்கணித்துள்ள மோடி அரசு- வைகோ கடும் கண்டனம்!
மத்திய அரசு திட்டமிட்டே புதிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். புதிய கல்விக் கொள்கையின் உள்ளடக்கங்கள் தமிழர்களுக்குத் தெரிந்தால் எதிர்ப்புகள் உருவாகும் என்ற நோக்கத்துடனேயே இவ்வாறு தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை எனமேலும் படிக்க...
உத்தரக்காண்ட் பனிச்சரிவில் சிக்கிய 8 பேர் உயிரிழப்பு: 384 பேர் மீட்பு
உத்தரக்காண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கிய 8பேர் உயிரிழந்துள்ளதுடன் 384 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. உத்தரக்காண்ட்- சாமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவும் பலத்த மழையும் கடந்த சில நாட்களாகவே நிலவி வருகின்றது. இத்தகைய நிலையில், நிதி பள்ளத்தாக்கிலுள்ள சும்னாவில் பனிப்பாளங்கள்மேலும் படிக்க...
தமிழகத்தில் 30 மணித்தியாலம் முழு ஊரடங்கு
தமிழகத்தில் 30 மணித்தியாலம் முழு ஊரடங்கு அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று (சனிக்கிழமை) இரவு 10 மணியில் இருந்து 30 மணித்தியாலம் ழுழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட இருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளமையினால் கடந்த 20ஆம் திகதிமேலும் படிக்க...
தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்!
தமிழகத்தில் மே மாதம் முதலாம் திகதி முதல் இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே மாதம் முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழகமேலும் படிக்க...
ஒக்சிசன் தயாரிப்புக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா? – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!
தூத்துக்குடியில் உள்ள வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை ஒக்சிசன் உற்பத்திக்காகத் திறந்தால் சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. ஆயினும், ஒக்சிசன் பற்றாக்குறையால் மக்கள் இறக்கும்போது அரசாங்கத்தால் இதுபோன்ற கருத்தைக் கூறமுடியாது என்றுமேலும் படிக்க...
இந்தியாவில் நான்காவது கொரோனா தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக அறிவிப்பு!
இந்தியாவில் நான்காவது கொரோனா தடுப்பூசி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் வைத்தியர் பால் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசியின் இரண்டு கட்ட சோதனைகள் நிறைவடைந்த நிலையில், அதன் முடிவுகள் மத்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர்களிடம் விரைவில் தாக்கல்மேலும் படிக்க...
கொரோனாவின் அதிதீவிரப் பரவல்: பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை!
கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிப்படைந்துள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் மருத்துவமனைகள் கடும் சிரமங்களைமேலும் படிக்க...
சரியான வியூகம் இல்லாதமையால் ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது – பிரியங்கா காந்தி
சரியான வியூகம் இல்லாதமையால் ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இது மத்திய அரசின் தோல்வியை காட்டுவதாகவும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் ஒக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- …
- 137
- மேலும் படிக்க