இலங்கை
அரசாங்கம் தமிழர்களை இலங்கையர்களாக கருத மறுக்கின்றது- மனோ கணேசன்

அரசாங்கம் தமிழர்களை இலங்கையர்களாக கருத மறுக்கின்றதென முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு தமிழ் அரசியல் பிரமுகர்கள் மற்றும் வெளிநாட்டு அரசியல்வாதிகள் என பலரும் கண்டனத்தை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்மேலும் படிக்க...
பதற்றநிலை நீடிக்கிறது – யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதி எங்கும் திரண்டுள்ளனர். இந்நிலையில்மேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவிட இடிப்பு: யாழ். பல்கலைக்கழக பகுதியில் பதற்றநிலை!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் திரண்டவண்ணமுள்ளனர். அத்துடன், கோப்பாய் பொலிஸாரும் இராணுவமும் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய எவருக்கும் பாதுகாப்புப்மேலும் படிக்க...
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி திருகோணமலையிலும் பிரார்த்தனை வாரம் ஆரம்பம்
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி திருகோணமலையில் பிரார்த்தனை வாரம் ஆரம்பபிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் பொது மக்கள்மேலும் படிக்க...
கொரோனா அச்சுறுத்தலினால் வவுனியா முடக்கப் பட்டது
கொரோனா அச்சுறுத்தலினால் வவுனியா முடக்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினரும் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். வவுனியா- பட்டானிச்சூரை சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கட்கிழமை கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி பொலிஸாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது. குறித்த பகுதியில்மேலும் படிக்க...
மனிதாபிமான அடிப்படையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் – உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை!
கொரோனா தொற்றால் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் இத்தருணத்திலாவது விடுதலை செய்ய வேண்டும் என கைதிகளின் உறவினர்கள் சர்வமத தலைவர்கள் முன்னிலையில் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சர்வமத கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணம்மேலும் படிக்க...
எஸ்.ஜெய்ஷங்கரை சந்தித்து பேசியது தமிழ் தேசியக் கூட்டமைப்பு!
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் அலுவலகத்தில் இன்று(வியாழக்கிழமை) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது புதிய அரசியலமைப்பு வரைபு மற்றும் தமிழ் மக்கள்மேலும் படிக்க...
தடுப்பூசியை விரைவில் இலங்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜெய்சங்கரிடம் ரணில் கோரிக்கை
இலங்கைக்கு கூடிய விரைவில் தடுப்பூசியை வழங்க டெல்லி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு, கொவிட் வைரஸ் பரவலினால் பிராந்தியத்தின் அனைத்து நாடுகளுமே பாரியமேலும் படிக்க...
அரசியல் கைதிகள் என எவரும் சிறைகளில் இல்லை – நீதி அமைச்சர்
அரசியல் கைதிகள் என எவருமே சிறைகளில் இல்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) வாய்மூல வினாக்கான விடை நேரத்தில் தமிழ் அரசியல் கைதிகள் குறித்து ஆளும் கட்சி உறுப்பினர் சுரேன் ராகவன் எழுப்பிய கேள்விக்குமேலும் படிக்க...
13 ஆம் திருத்தத்தை நடைமுறைப் படுத்துவது குறித்த ஜெய்சங்கரின் கருத்திற்கு கூட்டமைப்பு பாராட்டு
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, சமத்துவம், நியாயங்கள், சமாதானம் மற்றும் கௌரவமாக வாழும் உரிமை என்பன ஒன்றிணைந்த இலங்கைக்குள் வெற்றிகரமாக முன்னெடுக்கபட வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்திற்கு கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. அதிகார பகிர்வு விடயத்திலும் அரசியலமைப்பின் 13 ஆம்மேலும் படிக்க...
கிழக்கு மாகாண மக்களின் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்றுக்கு தீர்வு! – நாம் வாய்ச்சொல் வீரர்களல்ல – இரா.சாணக்கியன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தலையீடு காரணமாக கிழக்கு மாகாண மக்களின் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்றுக்கு தீர்வு கிடைத்துள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்ற புதிய இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கு (Cardiology Unit –மேலும் படிக்க...
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை அரசாங்கம் நிரூபிக்கும் – சரத் வீரசேகர
இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை மார்ச் மாத மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை நிரூபிக்கும் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் கருத்து தெரிவித்தமேலும் படிக்க...
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எஸ்.ஜெய்சங்கர்
ஒருமித்த இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற கூட்டு ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், அரசியலமைப்பின் 13மேலும் படிக்க...
தமிழ் மக்களுக்கு நடந்த அநியாயங்களை மூடிமறைக்கும் தரப்பினருடன் இணைய மாட்டோம்- சுரேஸ்
தமிழ் மக்களுக்கு நடந்த அநீயாயங்களை மூடிமறைக்கும் வகையில் செயற்படும் தரப்பினருடன் ஒருபோதும் இணையமாட்டோமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 21ஆம் ஆண்டுமேலும் படிக்க...
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்திலும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. வடக்கு- கிழக்கு சிவில் அமைப்புக்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம்- நல்லூர் ஆதீன முன்றலில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானுடனான இலங்கையின் உறவை வலுப்படுத்தும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
ஆப்கானிஸ்தானுடனான இலங்கையின் உறவை வலுப்படுத்துவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. இரு நாட்டுக்கும் இடையில் அரசியல் ஆலோசனை பொறிமுறையை நிறுவுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் திட்டத்திற்கே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்மேலும் படிக்க...
வடக்கில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 21ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 21ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு- கிழக்கில் அனுஸ்டிக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தில் 21ஆம் ஆண்டு நினைவு தினம்மேலும் படிக்க...
உறவுகளை இழந்து நிற்பவர்களின் வேதனை அனுபவப் பட்டால் மட்டுமே புரியும் – உறவுகள்
உறவுகளை இழந்து நிற்கும் அப்பாவி மக்களின் வேதனை என்னவென்று அனுபவபட்டிருந்தால் மட்டுமே அவர்களுக்கு புரிந்திருக்கும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பின் பணிப்பாளர் பி.கருணாவதி தெரிவித்தள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
புதிய ஆண்டில் அலுவலக கடமைகளை ஆரம்பிக்கும் வடக்கு ஆளுநர் செயலகம்
புதிய ஆண்டில் அலுவலக கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் மங்கள விளக்கு ஏற்றப்பட்டு, தேநீர் விருந்துபசாரம் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.ஏச்.எம்.சாள்ஸ், வடக்கு மாகாண பிரதமமேலும் படிக்க...
தொழிலாளர்களின் சம்பள உயர்வில் சதித்திட்டம்: போராட்டம் வெடிக்கும் – கணேசலிங்கம்
தொழிலாளர்களுக்கு வெறும் 25 ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கான சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு இடமளிக்க முடியாதென பெருந்தோட்ட தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கத்தின் செயற்பாட்டாளர் தங்கவேல் கணேசலிங்கம் தெரிவித்துள்ளார். அதாவது அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாயும் 25 நாட்கள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 296
- 297
- 298
- 299
- 300
- 301
- 302
- …
- 443
- மேலும் படிக்க
