Main Menu

ஆப்கானிஸ்தானுடனான இலங்கையின் உறவை வலுப்படுத்தும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஆப்கானிஸ்தானுடனான இலங்கையின் உறவை வலுப்படுத்துவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.

இரு நாட்டுக்கும் இடையில் அரசியல் ஆலோசனை பொறிமுறையை நிறுவுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் திட்டத்திற்கே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம், அரசியல், பாதுகாப்பு, பொருளாதார, கலாச்சார, கல்வி, சுகாதாரம், சமூக, தனிநபர் உறவுகள், மனிதவள மேம்பாட்டுத் துறைகள் மற்றும் பிற துறைகளை உள்ளடக்கிய இருதரப்பு உறவை ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டது.

அதன் பிரகாரம் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன குறித்த தீர்மானத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

பகிரவும்...