இலங்கை
தற்போதைய ஆட்சியில் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்குமென நம்பவில்லை: மாமனிதர் ரவிராஜின் மனைவி
தற்போதைய ஆட்சியின் கீழ் தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்குமென தான் நம்பவில்லை என்றும் நல்லாட்சியென கூறப்பட்ட முன்னைய ஆட்சியிலேயே தனது கணவரது படுகொலை வழக்கு மூடி வைக்கப்பட்டதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் மாமனிதர் ரவிராஜின் மனைவியுமான சசிகலா ரவிராஜ் தெரிவித்தார்.மேலும் படிக்க...
விக்னேஸ்வரன் மக்களிடம் கையேந்தாமல் தம்மோடு இணைந்து கொள்ளுமாறு ஆனந்த சங்கரி அழைப்பு!
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் பணம் கேட்டு கையேந்தி மரியாதை கெடுவதை விடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி அழைப்பு விடுத்துள்ளார். அவ்வாறு விக்னேஸ்வரன் தனது கட்சிக்கு வந்தால்மேலும் படிக்க...
மேற்குலக சக்திகளின் ஆலோசனைக்கு அமையவே மங்கள செயற்படுகின்றார்- பந்துல
நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, மேற்குலக சக்திகளின் ஆலோசனைகளை அடிப்படையாக கொண்டே செயற்படுகின்றாரென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,மேலும் படிக்க...
ஐ.தே.க. இன் அழிவிற்கு சஜித்தே காரணம்- நாமல்
ஐக்கிய தேசிய கட்சி அழிந்தமைக்கு சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள்தான் காரணமென ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில்மேலும் படிக்க...
வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவு
பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள், அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே குறிப்பிட்டுள்ளார். ஏனையமேலும் படிக்க...
பரந்தனில் சந்தேகத்திற்கு இடமான வெடிபொருள் பாதுகாப்பாக செயலிழப்பு செய்யப்பட்டது
பரந்தன், முல்லைத்தீவு வீதியில் வெடிப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக செயலிழப்புச் செய்யப்பட்டுள்ளது. பரந்தன் முல்லை வீதியில் உள்ள இராணுவ முகாம் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பொதியொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதோடுமேலும் படிக்க...
கதிர்காம பாதயாத்திரைக்கு அனுமதி வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
கதிர்காமத்துக்கான பாதயாத்திரைக்கு அனுமதியளிக்குமாறு ஜனாதிபதியிடம் மட்டக்களப்பு மாமாங்கம் பிள்ளையார் ஆலய பாதயாத்திரை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மட்டக்களப்பு மாமாங்க ஆலய வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். இதன்போது கருத்து வெளியிட்ட அவர்கள், “வருடாவருடம்மேலும் படிக்க...
இரணைமடு புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு
கிளிநொச்சி- இரணைமடு சேவைச்சந்தை அருகே இடம்பெற்ற புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 10.20 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த தர்ஷன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். மேலும் உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்குமேலும் படிக்க...
தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை வழங்கப்படும்- மஹிந்த
தமிழ் அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்கள் புரிந்தவர்கள் தவிர்ந்த ஏனையோர் விரைந்து விடுவிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சிறைச்சாலைகளிலுள்ள தமிழ்மேலும் படிக்க...
ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட செயலணி கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஓர் புதிய பரிமாணம் – தமிழர் மரபுரிமைப் பேரவை
கிழக்கில் தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாப்பதற்காக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஓர் புதிய பரிமாணம் என தமிழர் மரபுரிமைப் பேரவை கண்டனம் வெளியிட்டுள்ளது. இதுக்கு உரித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள தமிழர் மரபுரிமைப் பேரவை,மேலும் படிக்க...
தபால் மூல வாக்களிப்பு குறித்து வெளியான செய்தியில் உண்மை இல்லை- தேர்தல்கள் ஆணைக்குழு
பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான தினங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இதுவரை உத்தியோகபூர்வமாக நிர்ணயிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும் தபால் மூல வாக்களிப்புக்கான தினங்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகி இருக்கும் செய்தியில் உண்மை இல்லையென ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியமேலும் படிக்க...
மத அடிப்படையில் சிறுபான்மையின மக்கள் மீது திட்டமிட்ட பாகுபாடு- இலங்கை குறித்து அமெரிக்கா அறிக்கை
மத அடிப்படையில் சிறுபான்மையின மக்கள் மீது இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிட்ட பாகுபாடு தொடர்ச்சியாக காண்பிக்கப்பட்டு வருவதாக சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அறிக்கையில் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐக்கிய அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவினால் வெளியிட்டுவைக்கப்பட்ட 2019ஆம் ஆண்டிற்கான சர்வதேச மதச்மேலும் படிக்க...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர்களுக்கு இடையில் கலந்துரையாடல்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை மாட்டீன் வீதியில் உள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியில் 7 வேட்பாளர்கள், புளொட் அமைப்பில் இருவர் மற்றும்மேலும் படிக்க...
அமைதிவழிப் போராட்டக் காரர்கள் மீதான வன்முறையை நியாயப் படுத்த முடியாது- மன்னிப்புச் சபை
அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த காலங்களிலும் அதிகாரத்திலிருந்தவர்களால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவர்கள் மீது தேவையற்ற வன்முறைகள் அல்லது தாக்குதல்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பதுடன், அவற்றுக்கு நீதியும் வழங்கப்படவில்லை எனவும் மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.மேலும் படிக்க...
கதிர்காமத்திற்கான பாத யாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்
திருகோணமலையில் இருந்து ஆரம்பித்த கதிர்காமத்திற்கான பாதயாத்திரைக் குழுவினர் 11 நாளான இன்று(வியாழக்கிழமை) மட்டக்களப்பு வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோயினால் கடந்த மாதம் யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பித்த பாதயாத்திரை 24 மணித்தியாலங்களில் நிறுத்தப்பட்டதுடன் பாதையாத்திரை தொடர்பாகமேலும் படிக்க...
பொலிஸ் அதிகாரிகள் 30 பேர் தனிமைப் படுத்தப்பட்டனர்
அமெரிக்காவின் கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ப்லொய்டின் கொலைக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஜோர்ஜ் ப்லொய்டின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் கடந்த ஜூன் மாதம்மேலும் படிக்க...
பல்கலைக் கழகங்களை மீள திறப்பது குறித்த இறுதி தீர்மானம் இன்று
பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இறுதி தீர்மானத்தை எட்டுவதற்கான விசேட கூட்டம் இன்று பகல் 2 மணியளவில்மேலும் படிக்க...
கிழக்கின் தொல்பொருட்கள் இன, மத வேறுபாடு இன்றி பாதுகாக்கப்படும் – பாதுகாப்புச் செயலாளர்
கிழக்கு மாகாணத்தின் தொல்பொருட்களை இன, மத வேறுபாடு இன்றி பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் முகாமைத்துவம் குறித்த செயலணியின் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே பாதுகாப்புச் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார். கிழக்கில்மேலும் படிக்க...
தடைகளையும் மீறி சுதந்திரபுரம் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு
சுதந்திரபுரம் படுகொலை 22ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் பொலிஸாரின் தடைகளையும் மீறி அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கடந்த 1998 ஆம் ஆண்டு இதேநாளில் விமானப்படை மற்றும் ஒருங்கிணைந்த எறிகணை தாக்குதலில் 33 அப்பாவிமேலும் படிக்க...
மத நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி
மத நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஜூன் மாதம் 12 ஆம் திகதி முதல் 50 பேருக்கு உட்பட்ட வகையில் மத நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- …
- 257
- மேலும் படிக்க