இலங்கை
ஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு வெளியானது
இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் முழுமையாக தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இரவு 12 மணி முதல் காலை 4 மணி வரை அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் தளர்த்தப்படவுள்ளதாக அந்தப்மேலும் படிக்க...
வவுனியா- ஓமந்தையில் விபத்து: 18 பேர் படுகாயம்
வவுனியா- ஓமந்தை பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 18பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த 18பேரும் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றமேலும் படிக்க...
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினால் நீக்கப்பட்டது நயினாதீவிற்கான பாஸ் நடைமுறை
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினை தொடர்ந்து நீக்கப்படாமல் இருந்த நயினாதீவிற்கு செல்வதற்காக புதிதாக கொண்டுவரப்பட்ட பாஸ் நடைமுறை தற்போது நீக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,மேலும் படிக்க...
முழுமையான காணொளியை பார்த்துவிட்டு என்னைப்பற்றி விமர்சியுங்கள்- கருணா
இராணுவத்தைக் குறைத்து மதிப்பிட்டு பேசினேனா என்பதை முழுமையான காணொளியை பார்த்தால்தான் தென்னிலங்கையிலுள்ள மக்கள் மற்றும் ஏனையோர் புரிந்துக்கொள்ள முடியுமென முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒளிபரப்பாகும் சிங்கள தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர்மேலும் படிக்க...
எந்தக் காலத்திலும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி வருகின்றது – சுமந்திரன்
எந்தக் காலத்திலும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி நாட்டில் ஏற்படபோகின்றது என்றும் இது குறித்து நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வேட்பாளர்களை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) வடமராட்சிமேலும் படிக்க...
நீதியை தேவைக்கேற்ப வாங்க முடியுமாக இருந்தால் கைதிகளை விடுவிப்பதில் ஏன் தாமதம்
தேவைக்கேற்ப நீதியை அரசாங்கத்தினால் வாங்க முடியுமாக இருந்தால் சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிப்பதில் ஏன் தாமதம் காட்டுகின்றீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். கருணா அம்மான் வெளியிட்ட கருத்து தொடர்பாக அரசாங்கத்தை சார்ந்த சிலர் அவருக்கு ஆதரவாகமேலும் படிக்க...
படையினரை காப்பாற்ற கருணாவின் கருத்தை ஆதாரமாக பயன் படுத்துங்கள்: ஜனாதிபதியிடம் பிக்குகள் அமைப்பு கோரிக்கை
சர்வதேசத்தில் படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முறியடிப்பதற்கு கருணா வழங்கியுள்ள வாக்குறுதியை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென தேசிய பிக்குகள் கூட்டு என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் 2000 தொடக்கம் 3000 வரையிலான இராணுவத்தினரை கொன்றதாக கருணாமேலும் படிக்க...
பணத்திற்கு விலை போகும் வேட்பாளர்கள் எவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பணத்திற்கு விலைபோகும் வேட்பாளர்கள் எவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை என அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நேற்று (25) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாக இதனை தெரிவித்தார்.மேலும் படிக்க...
பொதுத் தேர்தலுக்கான சுகாதார அறிவுறுத்தல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி இன்று வெளியீடு?
பொதுத் தேர்தலுக்கான சுகாதார அறிவுறுத்தல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படவுள்ளது. சுகாதார அறிவுறுத்தல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் சட்டமா அதிபரின் அங்கீகாரம் பெற்றதன் பின்னர், இன்று வெளியிடப்படுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று அறிவித்திருந்தார். அதற்கமையமேலும் படிக்க...
மூத்த அறிவிப்பாளர் நடராஜசிவம் காலமானார்
இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரான சின்னையா நடராஜசிவம் காலமானர். நேற்று இரவு 11.30 மணியளவில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் காலமாகியுள்ளார். தனது 74 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார். நீண்டகாலமாக இலங்கை ஔிபரப்பு கூட்டுத்தாபனத்தில் அவர்மேலும் படிக்க...
இந்திய மீனவர்களின் எல்லை மீறிய செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்
இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக உள்நுழைகின்ற இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கான இணைந்த பொறிமுறை ஒன்றை உருவாக்கி முன்னகர்த்துவது தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும்மேலும் படிக்க...
கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்களுக்கு மாவை அழைப்பு!
துரதிஸ்ரவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியிருப்பது தனக்கு மிகுந்த கவலை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அத்தோடு தேர்தல் முடிந்ததற்கு பிறகு அவர்களை இணைத்து இந்த நெருக்கடியான காலகட்டத்தில், அடுத்த கட்ட நடவடிக்கைக்குமேலும் படிக்க...
கருணா குறித்து பேசுபவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியவர்களை மறந்து விட்டனர் – மஹிந்த
முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கருத்தினை அரசியலாக்கும் எதிர்தரப்பினர், விடுதலைப் புலிகளுக்கு யார், ஆயுதம் வழங்கியது என்பதை மறந்து விட்டார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தோடு, கருணாவின் வரலாறு ஒன்றும் இரகசியமல்ல,மேலும் படிக்க...
ஜனாதிபதி தொடர்பாக மங்கள மஹிந்தவுக்கு கடிதம்
மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் உயர் மட்ட அரச அதிகாரிகளை ஜனாதிபதி கடுமையாக விமர்சித்து மக்கள் மத்தியில் ஏளனத்துக்குள்ளாக்கியுள்ளமை பொருளாதார ரீதியில் எவ்வித ஆக்கப்பூர்வமான நுட்பம் ஜனாதிபதிக்கு கிடையாது என்பதை எடுத்துக்காட்டியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பிரதமர்மேலும் படிக்க...
அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகின்றது!
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று(புதன்கிழமை) கூடவுள்ளது. நாடாமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் சான் விஜயதுங்க ,ந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று மாலை 6 மணிக்கு அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.மேலும் படிக்க...
தரிஷா பஸ்டியனின் பாதுகாப்பை இலங்கை உறுதி செய்ய வேண்டும் – சர்வதேச அமைப்புக்கள் கோரிக்கை
ஊடகவியலாளரும் மனித உரிமை பாதுகாவலருமான தரிஷா பஸ்டியனின் பாதுகாப்பை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு, எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு, சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்,மேலும் படிக்க...
மக்களின் சொத்துக்களை கொள்ளை அடித்தவர்களின் அதிருப்தியே விசாரணைக்கு காரணம் – அநுர
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகள் வெறும் அரசியல் நோக்கங்களே காணப்படுகின்றன என அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள பொது மக்களின் சொத்துக்களை கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட குழுக்கள் மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ளமையே இதற்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். இன்றுமேலும் படிக்க...
கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரின் நலனுக்காகவே சசிகலா ரவிராஜ் களமிறக்கப் பட்டுள்ளார் – அரவிந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள முக்கியஸ்தர் ஒருவருடைய அரசியல் நலனுக்காகத்தான் சசிகலா ரவிராஜ் திட்டமிட்டவகையில் களமிறக்கப்பட்டுள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் உப தலைவரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சண்முகராஜா அரவிந்தன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்மேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தை உயிரிழப்பு
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் சுகயீனம் காரணமாக வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்துள்ளார். காணாமலாக்கப்பட்ட தங்களுடைய பிள்ளைகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரி வவுனியாவில் கடந்த 1222 நாட்களை கடந்து தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 2008மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- …
- 256
- மேலும் படிக்க