இலங்கை
சாதாரண அரசியல் வாதிகளுக்கு எழுந்து நிற்க வாய்ப்பு வழங்காமல் இருப்பது கொடுமை- ஹிருணிகா
நாட்டில் ஒரு சாதாரண அரசியல்வாதிக்கு எழுந்து நிற்க வாய்ப்பு வழங்காமல் இருப்பது மிகவும் கொடுமையான விடயமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாகமேலும் படிக்க...
விசாரணை ஆணைக்குழுக்களில் முன்னிலையாகினர் ரணில் மற்றும் ஹக்கீம்
அரசியல் பழிவாங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையாகியுள்ளார். சாட்சியம் வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்மேலும் படிக்க...
கொவிட் 19 சவால்களுக்கு வெற்றிகரமாக முகங் கொடுத்த இலங்கைக்கு நோர்வே பாராட்டு!
கொவிட் 19 சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்த நாடுகளில் இலங்கை முன்னணியில் இருப்பதாகவும் அந்த சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை பாராட்டுவதாகவும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் டீரீன யுரன்லி எஸ்கேடல் தெரிவித்தார். இன்று (வியாழக்கிழமை) முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனமேலும் படிக்க...
20ஆவது திருத்தச் சட்டமூல வரைபு – வர்த்தமானியில் உள்ளடக்குவதற்கான நடவடிக்கை ஆரம்பம்
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூல வரைபை வர்த்தமானியில் உள்ளடக்குவதற்காக அரசாங்க அச்சுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீதியமைச்சினால் தயாரிக்கப்பட்ட 20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் வரைபு சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம்மேலும் படிக்க...
வேலைத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப் பட மாட்டாது- ஜனாதிபதி
ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுத் தரும் வேலைத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப்படமாட்டாது என்றும் குறித்த பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு உரிய முறையில் விரைவில் வழங்கி வைக்கப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்மேலும் படிக்க...
19 இல் உள்ள சில நல்ல விடயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் – டிலான் பெரேரா
19 இல் உள்ள சில நல்ல விடயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்திலுள்ளமேலும் படிக்க...
13ஆவது திருத்தம் பற்றி எந்த முடிவும் எடுக்கப் படவில்லை- பிரசன்ன ரணவீர
இந்தியாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை உள்ளடக்கிய 13ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது குறித்த எந்தவொரு இறுதிமுடிவையும் எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும் இராஜாங்க அமைச்சருமான பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார். இதேவேளை, 19ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாகமேலும் படிக்க...
அரசியல் பழி வாங்கல்கள் குறித்த குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு
அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானோர் தொடர்பாக ஆராயும் குழுவின் முதன்மை அறிக்கை இன்று (புதன்கிழமை) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு தொக்கம் 2019 ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச மற்றும் அரை அரச சேவையில்மேலும் படிக்க...
பிரபாகரன் மக்களால் போற்றப்பட்டார் – எரிக் சொல்ஹெய்ம்
30 வருடங்களாக இலங்கைத்தீவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் நோர்வேயின் சமாதான மத்தியஸ்தராக இருந்த எரிக்சொல்கெய்ம் WION தொலைக்காட்சியின் நிரூபர் பத்மா ராவ் சுந்தர்ஜிக்கு அளித்த செவ்வியில், அவரது சர்ச்சைக்குரிய பாத்திரம் பற்றியமௌனத்தைக் கலைக்கிறார். பத்மா ராவ் சுந்தர்ஜி கடந்த 20 வருடங்களாகமேலும் படிக்க...
மகியங்கனையில் கோர விபத்து – விரிவுரையாளர்கள் ஐவர் படுகாயம்!
பதுளை – மகியங்கனை – சொரணதொட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் விரிவுரையாளர்கள் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 2.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விரிவுரையாளர்கள் பயணித்த கார் வீதியை விட்டு விலகி 40மேலும் படிக்க...
அபுதாபியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இலங்கையர் உயிரிழப்பு
ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைந்துள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இலங்கைப் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை பகுதியைச் சேர்ந்த ரங்கன சமித் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகர் அபுதாபி மற்றும் அதன் சுற்றுலா மையமான டுபாயில்மேலும் படிக்க...
விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செய்வதை அனுமதிக்க மஹிந்த தயாராக இருந்தார் – எரிக் சொல்ஹெய்ம்
தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செய்வதை அனுமதிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருந்தார் என நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலைப்மேலும் படிக்க...
மூன்று முக்கிய அமைச்சுக்களை நீக்கியது ஏன்: பிற தேசிய இனங்களை அச்சுறுத்துவதே நோக்கமா? – சுரேஷ் பிரேமச்சந்திரன்
பிற தேசிய இனங்களின் அடையாளத்தையும் இருப்பையும் அச்சுறுத்துவதுதான் ராஜபக்ஷக்களின் அரசாங்கத்தின் நோக்கமா என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். இதேவேளை, புதிய அரசாங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் இந்து மத விவகாரம், அரச கருமமொழிகள் அமுலாக்கம்,மேலும் படிக்க...
சட்டமா அதிபரின் மீளாய்வுக்காக அனுப்பப் பட்டது 20ஆவது அரசியல் அமைப்புத் திருத்த வரைபு
அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த வரைபு சட்டமா அதிபரின் மீளாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த வரைவு நீதியமைச்சின் செயலாளர் ஊடாக தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, 19ஆவது திருத்தத்தை நீக்கி 20ஆவது திருத்தச்மேலும் படிக்க...
இலங்கையில் மீண்டும் ஊரடங்கு? – மக்களுக்கு எச்சரிக்கை
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த விடயம் தொடர்பாக இலங்கையும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்று நோய் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதுவிடின், கடந்த மாதங்களைப் போன்று மீண்டும் ஊரடங்குமேலும் படிக்க...
நல்லூர் தேர் உற்சவம்: மக்களிடம் அரச அதிபர் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!
தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்திற்கொண்டு நல்லூர் தேர் உற்சவத்திற்கு அடியவர்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். நாளை மறுதினம் நல்லூர் ஆலய தேர் உற்சவம் நடைபெறவுள்ள நிலையில் தற்போது உள்ள கொரோனாமேலும் படிக்க...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக இணக்கப்பாடு!
ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கும் நாட்டின் நலன்களுக்கும் பொருத்தமான, ஓர் இளம் தலைவரிடம் கட்சியின் தலைமைத்துவத்தை ஒப்படைக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு, அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் கூடிய நிலையில் இந்தமேலும் படிக்க...
புதிய நாடாளுமன்றில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார் ஜனாதிபதி!
எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கவுள்ளார். இந்நிலையில், குறித்த தினத்தில் பிற்பகல் 3 மணிக்கு முதலாவது அமர்வை ஜனாதிபதி ஆரம்பித்துவைக்கவுள்ளதுடன் புதிய அரசாங்கத்தின் கொள்கைக் பிரகடன உரையை அவர் நிகழ்த்தவுள்ளதாகமேலும் படிக்க...
இறுதி முடிவைப் பெற நாம் அமைதியாக காத்திருக்க வேண்டும் – மைத்திரிபால
எமக்கான சவாலை முறியடித்த பின்னர் முடிவைப்பெறுவதற்கு சிறிது நேரம் அமைதியாக காத்திருக்க வேண்டியது அவசியமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன, தனது முகப்புத்தகத்தில் இவ்வாறு பதிவேற்றியுள்ளார். நிறைவடைந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மேலும் படிக்க...
அனைத்து பல்கலைக் கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் மீண்டும் ஆரம்பம்!
நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைவாக எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் பல்கலைக்கழக நடவடிக்கைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்களின் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனே அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- …
- 257
- மேலும் படிக்க