Author: trttamilolli
இலங்கை கடற்படையினர் கச்சதீவில் தமிழக இளைஞர்களை தாக்கினர் – தமிழகத்தில் இருந்து குற்றச்சாட்டு

கச்சதீவு திருவிழாவின்போது இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் தமிழக பக்தர்களை தாக்கினார் எனவும் இதன்போது தமிழக இளைஞர்கள் தரையில் இருந்து “இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும், குறித்த கடற்படை அதிகாரியை தண்டிக்க வேண்டும்” என எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர் எனவும் அதன்பின்னர்மேலும் படிக்க...
மத்திய கிழக்கு போர்ச் சூழல்: ஜனாதிபதிக்கு ஜி.எல். பீரிஸ் அவசர கடிதம்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தின் மூலம்மேலும் படிக்க...
ஈரானின் அணுசக்தி திறன்கள் முழுமையாக அழிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் மற்றும் லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ள நிலையில், இஸ்ரேலியப் படைகள் தெஹ்ரான் மற்றும் பெய்ரூட் மீது தாக்குதல்களைத் தொடர்கின்றன. ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை இரண்டு ட்ரோன்கள் தாக்கியதால், குறைந்தளவிலான தீப்பரவல் மற்றும் சிறியளவான சேதம் ஏற்பட்டதாகமேலும் படிக்க...
ஈரானில் உலகப் பாரம்பரியத் தளம் சேதம் – UNESCO கவலை

யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்ட, தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோலஸ்தான் அரண்மனை (Golestan Palace), தாக்குதல்களால் சேதமடைந்துள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அரண்மனைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தியையடுத்து, யுனெஸ்கோ அமைப்பு தனதுமேலும் படிக்க...
அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்

அயத்துல்லா அலி காமெனீ அவர்களின் மறைவையொட்டி சம்மாந்துறையில் நேற்று துக்கக் கொடிகள் ஏற்றப்பட்டன. உலக இஸ்லாமிய தலைவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்பட்ட அவர்களின் இழப்பை நினைவுகூரும் வகையில், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அ.அப்னான் தலைமையில் இளைஞர்கள் இணைந்து இந்த நிகழ்வைமேலும் படிக்க...
அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காக அர்ப்பணிப்பை வழங்க வேண்டும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது நாடாளுமன்றத்தில் மத்திய கிழக்கின்மேலும் படிக்க...
சுமந்திரன், இரா.சாணக்கியன் நோர்வே துணை அமைச்சருடன் சந்திப்பு

நோர்வேயின் துணை வெளிவிவகார அமைச்சர் அண்ட்ரியாஸ் கிராவிக்கை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் சந்தித்துள்ளனர். இச்சந்திப்பில், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கு–கிழக்கு பகுதிகளின் நிலவரம், மக்களின்மேலும் படிக்க...
ஹபரணை – பொலன்னறுவை வீதியில் விபத்து – 10 பேர் காயம்

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று, மற்றொரு பேருந்துடனும் நெல் அறுவடை இயந்திரத்தைக் கொண்டு சென்ற உழவு இயந்திரடத்துடன் மோதியதில் இந்த விபத்துமேலும் படிக்க...
எந்தவொரு இராணுவ நடவடிக்கையிலும் ஈடுபட விரும்பவில்லை – சைப்ரஸ் ஜனாதிபதி

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய இராணுவத் தளம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடௌலைட்ஸ் தெரிவித்துள்ளார். தெற்கு சைப்ரஸில் உள்ள பிரித்தானிய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பிரித்தானிய இராணுவத் தளத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
பிரித்தானிய புகலிடக் கோரிக்கை முறையில் அதிரடி மாற்றம்: அகதிகளுக்கு இனி ‘தற்காலிக அந்தஸ்து’ மட்டுமே

பிரித்தானியாவில் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், அதற்குப் பதிலாக ‘தற்காலிகப் பாதுகாப்பு’ (Temporary Protection) மட்டுமே வழங்கப்படும் என்றும் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ளார். இன்று முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றம், பிரித்தானியமேலும் படிக்க...
ஈரானுக்கு அனுதாபம் தெரிவித்த மஹிந்த

ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் படுகொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளித்துள்ளதாக, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் இலங்கையின் நெருங்கியமேலும் படிக்க...
ஈரானுக்கு தகுந்த பதிலடி – வளைகுடா நாடுகள் உத்தியோக பூர்வமாக அறிவிப்பு

ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்கான திட்டங்களைப் பரிசீலித்து வருவதாக வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன. சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு சபை இணைந்துமேலும் படிக்க...
ஈரானுக்கு எதிராக ஓரணியில் உலக நாடுகள்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஓரணியில் திரண்டு வருவதுடன், ஐக்கிய அரபு அமீரகம் அங்குச் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான விசேட சலுகைகளை அறிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்கத் தயாராக உள்ளதாகப்மேலும் படிக்க...
லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் – 31 பேர் பலி

லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதல்களில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், 149 பேர் படுகாயமடைந்துள்ளதாக லெபனான் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தத் தாக்குதல்கள் பிராந்தியத்தில் மேலும்மேலும் படிக்க...
எடப்பாடி பழனிசாமி இன்று டில்லி பயணம் – அமித் ஷாவுடன் சந்திப்பு

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டில்லி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரையில் நேற்று நடைபெற்றமேலும் படிக்க...
மத்திய கிழக்கிலிருந்து இலங்கையர்களை உடனடியாக வெளியேற்றுவது சாத்தியமில்லை – அரசாங்கம்

மோதல் காரணமாக மத்திய கிழக்கில் பெரும்பாலான விமான நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால், பிராந்தியத்திலிருந்து இலங்கையர்களை உடனடியாக வெளியேற்றுவது தற்போது சாத்தியமில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அத்துடன், மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது சுமார் 1 மில்லியன் இலங்கைமேலும் படிக்க...
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன யாழிற்கு விஜயம்

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு இன்று(01) விஜயம் மேற்கொண்டார். அவரோடு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆனந்தராசா, கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோணிப்பிள்ளை யூட்சன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர். பிரதம நீதியரசர் அடங்கிய குழுவினரை சாவகச்சேரிமேலும் படிக்க...
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் 115 விமானங்கள் ரத்து

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுக்க இருந்த 115 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து, மீள் புறப்பட திட்டமிடப்பட்டிருந்த 115 விமானங்கள் இன்று (02) இரவு 9.50மேலும் படிக்க...
எரிபொருள் வரிசை தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் – அரசாங்கம் எச்சரிக்கை

அச்சம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்கள் வரிசையில் நின்று எரிபொருள் வாங்கும் செயற்பாடு தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எரிசக்தி பிரதி அமைச்சர் அக்ரம் இலியாஸ் இதனை தெரிவித்துள்ளார். கடந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- …
- 1,122
- மேலும் படிக்க

