Author: trttamilolli
நாடு முழுவதும் 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
நாடு முழுவதும் மொத்தம் 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியதுபுதுடெல்லி: கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்றுமேலும் படிக்க...
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்க்கு பல்வேறு நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியாவிலும் இதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றனமேலும் படிக்க...
கூட்டமைப்பின் வசமிருந்த திருகோணமலை பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன கைப்பற்றியது
கடந்த 25 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த திருகோணமலை பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியுள்ளது. திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) புதியமேலும் படிக்க...
கூட்டமைப்பில் இருந்து விலகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது – செல்வம் அடைக்கலநாதன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து டெலோ வெளியேறவுள்ளதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானது என அறிய முடிகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு ஜெனீவா விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடாமல் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகவே முடிவெடுத்திருந்ததாக செய்திகள் வெளியாகின. அத்தோடுமேலும் படிக்க...
இந்தோனேசியாவில் கடும் பூகம்பம்: தரைமட்டமான மருத்துவமனை -3 பேரின் உடல்கள் மீட்பு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மருத்துவமனை இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின.மேலும் படிக்க...
நீண்ட இழுபறிக்குப் பின் சீனா சென்றடைந்தது உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு
சீனாவின் உகான் நகருக்கு சென்றுள்ள, உலக சுகாதார நிறுவன வல்லுநர் குழு கொரோனா எப்படி உருவானது என்பது குறித்து ஆய்வு நடத்த உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரொனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தமேலும் படிக்க...
போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை வணங்குகிறேன்… பிரதமர் மோடி தமிழில் ட்வீட்
இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று திருவள்ளுவர் தினத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். உலகப் பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றிமேலும் படிக்க...
வேளாண் சட்டங்கள் குறித்த இறுதி பேச்சு வார்த்தை இன்று!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. எதிர்வரும் 19 ஆம் திகதி உச்சநீதிமன்றம் அமைத்த குழு தன் முதல்கூட்டத்தைக் கூட்ட உள்ள நிலையில் அரசுடன் விவசாயிகள் நடத்தும் கடைசிப் பேச்சுவார்த்தைமேலும் படிக்க...
சீரற்ற வானிலை காரணமாக, 23 ஆயிரத்து 380 பேர் பாதிப்பு!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, 23 ஆயிரத்து 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கிழக்கு மாகாணத்திலேயே அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்குமேலும் படிக்க...
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இம்முறை இடம்பெறாது என அறிவிப்பு!
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இம்முறை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். நிலவுகின்ற கொரோனா சூழ்நிலை காரணமாக திருவிழாவை நடத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
இலங்கையில் மனித உரிமை நிலை மோசமடைந்து உள்ளதாக கவலை!
இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சிறுபான்மை சமூகத்தினர் பாகுபாட்டையும் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்குவதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறுபான்மைமேலும் படிக்க...
தைத் திருநாளில் வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயிலில் விசேட பூசை!
தைப்பொங்கல் தினமான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் இன்று காலை ஏழு மணி தொடக்கம் விசேட பூசைகள் இடம்பெற்றன. இந்த பூசைகளில் ஒரு சில பொதுமக்கள் மாத்திரம் கலந்துகொண்டமேலும் படிக்க...
இலங்கை அரசின் உரிமை அழிப்புக்கு எதிராக பன்னாட்டு செயற்பாட்டாளர்களின் கூட்டு அறிக்கை!
இலங்கை அரசாங்கம், மக்களின் அடிப்படை உரிமைகளையும் நல்லிணக்க செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக அழித்தொழித்து வருவதற்கெதிரான கூட்டு கண்டன அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 10ஆம் திகதி, இலங்கையை தாயமாகக் கொண்ட பல்வேறு நாடுகளில் வதியும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் சமூகமேலும் படிக்க...
நாடு தழுவிய புதிய முடக்கநிலையை அறிவித்தது போர்த்துகல்!
அதிகரித்து வரும் கொவிட்-19 நோய்த்தொற்று வீதத்திற்கு பதிலளிக்கும் விதமாக போர்த்துகல் அரசாங்கம் நாடு தழுவிய புதிய முடக்கநிலையை அறிவித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவில் நடைமுறைக்கு வரும் மற்றும் வசந்த காலத்தில் விதிக்கப்பட்டுள்ளதைப் போலவே இருக்கும். அத்தியாவசியமற்ற வணிகத்தை நிறுத்திமேலும் படிக்க...
ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமில்லை: அரசியல் வல்லுநர்கள்!
அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது முறையாக கண்டனத் தீர்மானத்திற்குள்ளாகியுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமில்லை என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ட்ரம்பின் பதவிக்காலம் ஜனவரி 20ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில் அதற்கு முன்பாக செனட் சபை கூட வாய்ப்பில்லை என்பதால்மேலும் படிக்க...
நல்லூர் கந்தசுவாமி கோயிலை அடையாளப் படுத்தும் அலங்கார வளைவு திறக்கப் பட்டது!
யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில் இந்த அலங்கார வளைவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் முயற்சியிலும், நிதிமேலும் படிக்க...
ஜல்லிக்கட்டின் பெருமையை இன்று நேரடியாக அறிந்து கொண்டேன்- ராகுல்காந்தி
ஜல்லிக்கட்டின் பெருமையை இன்று நேரடியாகக் கண்டு புரிந்துகொண்டதாக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மதுரையில் அவனியாபுரத்தில் இன்று (வியாழக்கிழமை) ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரடியாகக் கண்டுகளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தெரிவிக்கையில், ஜல்லிக்கட்டை ஏன்மேலும் படிக்க...
இனப் பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டது – காஞ்சன ஜயரத்ன!
இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாகாண சபை உறுப்பினர் ஒன்றியத்தின் தலைவர் காஞ்சன ஜயரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டமேலும் படிக்க...
திருக் கேதீஸ்வரத்தில் தைத் திருநாளை முன்னிட்டு விசேட பூசை!
தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) காலை வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் பொங்கல் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன. கொரோனாமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 291
- 292
- 293
- 294
- 295
- 296
- 297
- …
- 828
- மேலும் படிக்க