Main Menu

கூட்டமைப்பில் இருந்து விலகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது – செல்வம் அடைக்கலநாதன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து டெலோ வெளியேறவுள்ளதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானது என அறிய முடிகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு ஜெனீவா விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடாமல் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகவே முடிவெடுத்திருந்ததாக செய்திகள் வெளியாகின.

அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனுக்குக் கடிதத்தின் மூலம் ரெலோ அறிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இந்த அறிக்கைகள் குறித்து அக்கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனிடம் தொடர்பு கொண்ட போது இதற்கு பதிலளித்த அவர், இவ்வாறு வெளியாகிய செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என குறிப்பிட்டார்.

பகிரவும்...