Main Menu

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (18) விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி வரை தடை உத்தரவு  நீடிக்குமாறு  உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட  முறைப்பாட்டின்  அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...