மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா – இலட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (2) சிறப்பாக இடம்பெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக திருவிழாத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து, மடு அன்னையின் மகிமை விளங்கும் திருச்சொரூப பவனி இடம்பெற்றதுடன் பவனியின் இறுதியில் , பக்தர்களுக்கான திருச்சொரூப ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.
குறித்த திருவிழா திருப்பலியில் அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,திணைக்கள தலைவர்கள்,அரசியல் பிரதி நிதிகள் மற்றும் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஜூன் 23 ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, நவநாள் வழிபாடுகள் மற்றும் திருச்செபமாலை ஆராதனைகள் இரு மொழிகளிலும் இடம்பெற்றன.
