Main Menu

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பிடனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

அமெரிக்க  ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பிடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன், துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும், அமெரிக்க வரலாற்றில் துணை ஜனாதிபதியாக முதன்முதலில் பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றால் அது கமலா ஹாரிஸ்தான். இந்தியாவை குறிப்பாகத் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவராவார்.

இந்நிலையில், அமெரிக்க  ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பிடனுக்கும், துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிசுக்கும்  ஏனைய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஜோ பிடனுக்கும், கமலா ஹாரிஸுக்கும்  தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறியுள்ளதாவது,  “அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த வெற்றியின் மூலம் கமலா ஹாரிஸ், தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...