Main Menu

இந்திய வீரர்களின் ரோந்து பணியை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது – ராஜ்நாத் சிங்

லடாக்கின் எல்லைப் பகுதியில் இந்திய இராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா – சீனாவிற்கு இடையில் எல்லைப்பிரச்சினை நீடித்து வரும் நிலையில், இது குறித்த அறிக்கையை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (வியாழக்கிழமை) மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

இதனையடுத்து எல்லைப்பிரச்சினை குறித்து காங்கிரஸ் கட்சியின் எதிர்கட்சி உறுப்பினரான  ஏகே அந்தோனி  இந்திய வீரர்களின் ரோந்து பணியை சீன வீரர்கள் தடுக்கிறார்களா எனக் கேள்வி எழுப்பினார்.  குறித்த கேள்விக்கு பதிலளித்த ராஜ்நாத் சிங் மேற்படி கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “போரை தொடங்குவது நமது கைகளில் உள்ளது. ஆனால் அது எங்கு முடியும் என்பது நமது கைகளில் இல்லை. அமைதி சில சமயங்களில் சமரசத்திற்கு உட்படுத்தப்படுகிறது என்பது ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது.

நாங்கள் முன்பை விட மிகவும் வித்தியாசமானவர்கள் ஆனாலும் அமைதியை நிலைநாட்டுவதில் குறிக்கோளாக உள்ளோம். 130 கோடி மக்களுக்கும் நான்
சொல்லிகொள்வது என்னவென்றால் நாங்கள் உங்களை வீழ்த்த விடமாட்டோம்.

நாம் யாருக்கும் தலைவணங்கமாட்டோம். யாரையும் நமக்கு தலைவணங்க வைப்பதும் நமது நோக்கமல்ல. இந்திய வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

பகிரவும்...