Main Menu

பொதுஜன பெரமுன தனது தேர்தல் பிரசாரங்களை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தங்களது தேர்தல் பிரசாரங்களை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் பொதுஜன பெரமுனவினால் நடத்தப்படவிருந்த கூட்டங்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த கூட்டங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்ப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது தேர்தல் பிரசாரங்களை மட்டுப்படுத்திக்கொள்ளுமாறும் பிரசார கூட்டங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...