Day: July 12, 2020
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 262 (12/07/2020)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
இங்கிலாந்திலிருந்து கொரோனா தொற்று வருவதை தவிர்ப்பது குறித்து ஸ்கொட்லாந்து கவனம் செலுத்துகின்றது
பிரித்தானியாவின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் கொரோனா வைரஸை ஸ்கொட்லாந்திற்கு கொண்டு வருவதைத் தவிர்ப்பது குறித்து தனது அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார். ஸ்கொட்லாந்தில் நேற்று கொரோனா வைரஸ் உறுதியான புதிய நோயாளிகளின் எண்ணிக்கை ஒற்றைமேலும் படிக்க...
இஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா அருங்காட்சியகம் மசூதியாக மாறுகிறது- பாப்பரசர் கவலை
இஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா (Hagia Sophia) அருங்காட்சியகத்தை மீண்டும் மசூதியாக மாற்றுவதற்கு துருக்கி எடுத்த முடிவால் கவலையடைவதாக புனித பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஹாகியா சோபியா அருங்காட்சியகம் விடயத்தில் துருக்கியின் முடிவு கவலைக்குரியது.மேலும் படிக்க...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 5 பொலிஸார் பணி இடைநீக்கம்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான மேலும் 5 பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடியினரால் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்துமேலும் படிக்க...
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகளுக்கும் கொரோனா!
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் மாமனார் அமிதாப் பச்சனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் இருவரும்மேலும் படிக்க...
புலிகளுடன் தொடர்புடையதாக வெளிநாட்டு அமைப்புகள், தனிநபர்களுக்குத் தடை?
ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் (UNSC) 1,373 என்ற தீர்மானத்தின் கீழ் இலங்கை அரசாங்கம் சில வெளிநாட்டு அமைப்புகளையும் தனிநபர்களையும் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை நியூஸ் இன் ஏசியா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பில்மேலும் படிக்க...
பாடசாலைகளுக்கு விடுமுறை- கல்வி அமைச்சு அதிரடி அறிவிப்பு
எதிர்வரும் 13 முதல் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடி நிலைமை மோசமடைந்தால்மேலும் படிக்க...
தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய தமிழ் கட்சிகளால் பேரம் பேசும் சக்தியாக உருவாக முடியாது- மயூரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய தமிழ் கட்சிகளால் பேரம்பேசும் சக்தியாக உருவாக முடியாது என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் க.மயூரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, முள்ளியவளையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
கொவிட்-19: ஜேர்மனியில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை நெருங்குகின்றது!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு ஒரு இலட்சத்து 99ஆயிரத்து 558பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர். உலகளவில் கொவிட் தொற்றினால் அதிகம் பாதிப்பை எதிர்கொண்ட இரண்டாவது நாடாகமேலும் படிக்க...
பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயம் ஆக்குகின்றது பெல்ஜியம்!
கடைகள் மற்றும் சினிமாக்கள் போன்ற பொது இடங்களில், முகக்கவசம் அணிவதை பெல்ஜியம் அரசாங்கம் கட்டாயப்படுத்தியுள்ளது. இன்று (சனிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த விதியை பின்பற்றத் தவறுபவர்களுக்கு 250 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படுகின்றது. மேலும், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் சூதாட்டமேலும் படிக்க...
பிரான்ஸில் அணு மின் நிலையத்தில் பணிபுரிந்த 23 பேருக்கு கொவிட்-19 தொற்று!
பிரான்ஸில், பெல்லிவில்-சுர்-லோயர் (Belleville-sur-Loire) அணு மின் நிலையத்தில் பணிபுரிந்த, 23 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜூன் மாத இறுதியில் இங்கு பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பிராந்திய சுகாதாரமேலும் படிக்க...
கொரோனா வைரஸ்: இஸ்ரேலில் ஆயிரக் கணக்கானோர் எதிர்ப்பு போராட்டம்
கொரோனா வைரஸ் நெருக்கடியை அரசாங்கம் தவறாக கையாண்டதால் ஏற்படும் பொருளாதார மத்தநிலையை சுட்டிக்காட்டி அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முகக்கவசங்களை அணித்திருந்தபோதும் சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை என கூறப்படுகின்றது. இதேவேளை கொரோனாமேலும் படிக்க...
8,000இற்கும் அதிகமான கைதிகளை விடுவிக்க உள்ளதாக கலிபோர்னியா அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து 8,000இற்கும் அதிகமான கைதிகளை விடுவிக்கவுள்ளதாக கலிபோர்னியா அரசு அறவித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள கலிபோர்னியா சிறைத்துறை அதிகாரிகள், கலிபோர்னியாவில் 8,000இற்கும் அதிகமான சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கான தகுதியுடன் உள்ளனர் என தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனாமேலும் படிக்க...
ஒரேநாளில் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
இந்தியாவில் நேற்று ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவாக 28, 637 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. அதேநேரம், இந்த வைரஸ் தொற்றுமேலும் படிக்க...