Day: September 19, 2020
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து முக்கிய வீராங்கனை விலகல்!
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து ஜப்பானின் முன்னணி வீராங்கனை நவோமி ஒசாகா விலகியுள்ளார். காயம் காரணமாகத் தன்னால் பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த அமெரிக்கமேலும் படிக்க...
இங்கிலாந்தில் திருடப்பட்ட அரிய புத்தகங்கள் ருமேனியாவில் கண்டெடுப்பு!
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், இங்கிலாந்தில் திருடப்பட்ட 2.5 மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்பிலான அரிய புத்தகத் தொகுப்புகளை ஐரோப்பிய நாடான ருமேனியாவில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக, பல நாடுகளில், 45இற்கும் மேற்பட்ட இடங்களில் தேடுதல் நடத்திய பொலிஸார் இறுதியாக ருமேனியாவில் கிராமப்புறத்தில் ஒருமேலும் படிக்க...
பாதுகாப்புத்துறை தகவல்களை சீனாவுக்கு வழங்கிய பத்திரிகையாளர், சீனர் உட்பட மூவர் கைது!
இந்திய பாதுகாப்புத்துறை தொடர்பான இரகசியத் தகவல்களை சீன உளவுத்துறைக்கு அனுப்பிய பத்திரிகையாளர் உட்பட மூவரை டெல்லி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். டெல்லியைச் சேர்ந்த ஃப்ரீலான்சிங் பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா, டெல்லியில் வசித்துவந்த சீனப் பெண் மற்றும் நேபாளப் பிரஜை ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
திலீபனின் பெயராலாவது தமிழ் கட்சிகள் ஒற்றுமைப் படுமா?
மணிவண்ணன் ஒருவிதத்தில் தமிழரசுக் கட்சியை பாதுகாத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். அவருடைய கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணி அவரைக் கையாண்ட விதம், கையாண்ட காலம், அதன் விளைவுகள், அதனால் ஏற்பட்ட பொதுசன அபிப்பிராயம் என்பவற்றை தொகுத்துப் பார்த்த தமிழரசுக்கட்சி தன்னை சுதாகரித்துக்மேலும் படிக்க...
வெளியிலிருந்து முன் வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை – அரசாங்கம்
இலங்கைக்கு வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என அரசாங்கம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தெரிவித்துள்ளது. நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக உண்மையான நல்லிணக்கத்தை வழங்கத் தவறிய வெளிப்புறமாக இயக்கப்படும் ஒரு கட்டமைப்பைத் தொடர விரும்புவதற்குப் பதிலாகமேலும் படிக்க...
அடிப்படை உரிமையை வலியுறுத்திய தமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது!
தியாகி திலீபனின் நினைகூரலை நடத்தும் அடிப்படை உரிமையை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்புவதற்காக தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது. வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) ஒன்றுகூடிய தமிழ் தேசியம் சார் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்துமேலும் படிக்க...
இரட்டைக் குடியுரிமையால் புலம்பெயர் அமைப்புக்களும் நாடாளுமன்றம் வரலாம்- எச்சரிக்கிறார் ஞானசாரர்
விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதக் கொள்கையானது உலகம் முழுவதும் வியாபித்துள்ளது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், புலம்பெயர் அமைப்பினரும் அதிகளவில் இரட்டைக் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர் என்றும் பிரபாகரனால் செய்ய முடியாதை நாடாளுமன்றத்தில்மேலும் படிக்க...
ஸ்பெயினின் தலைநகரில் மீண்டும் கொவிட்-19 கட்டுப்பாடுகள்!
ஸ்பெயினின் தலைநகர் மட்ரிட்டின் பகுதிகள், கொவிட்-19 தொற்று பரவலின் உயர்வைக் கட்டுப்படுத்த முடக்கநிலை கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட உள்ளன. திங்கட்கிழமை முதல், மட்ரிட் பிராந்தியத்தில் 850,000க்கும் அதிகமான மக்கள், பயணம் மற்றும் குழுக்களின் அளவுகளில் வரம்புகளை எதிர்கொள்வார்கள். ஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனாமேலும் படிக்க...
பிரான்ஸில் கொவிட்-19 தொற்று பரவல் அதிகமுள்ள நகரங்களில் புதிய கட்டுப்பாடுகள்!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், சில பகுதிகளில் கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி கொவிட்-19 தொற்று பரவல் அதிகம் உள்ள லியோன் மற்றும் நீஸ் நகரங்களில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என சுகாதாரமேலும் படிக்க...
டிக்டொக் மற்றும் வீ சட் செயலிகளை பதிவிறக்க அமெரிக்காவில் தடை
சீன நிறுவனத்திற்கு சொந்தமான, டிக்டொக் மற்றும் வீ சட் செயலிகளை பதிவிறக்குவதற்கான தடையை நாளை முதல் தடைவிதிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அடுத்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் சீனாவிற்கு சொந்தமானமேலும் படிக்க...
செம்மணி இந்து மயான வளாகத்துக்குள் புதைக்கப் பட்டிருந்த கைக்குண்டு, மிதிவெடி விசேட அதிரடிப் படையினரால் மீட்பு
செம்மணி இந்து மயான வளாகத்தினுள் புதைக்கப்பட்டிருந்த குண்டு, மிதிவெடி இன்று(சனிக்கிழமை) காலை விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த விக்டர் சுந்தர் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவாமேலும் படிக்க...
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 18 இலங்கையர்கள்!
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 18 இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளனர். விசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அமெரிக்க பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்றை கண்டறியும் பி.சி.ஆர் சோதனைகள் செய்யப்பட்டு பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டமேலும் படிக்க...
ஜனாதிபதிக்கு பௌத்த ஆலோசனை சபை பாராட்டு
மகா சங்கத்தினரின் உபதேசங்கள் மற்றும் ஆலோசனைகளை செயற்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பௌத்த ஆலோசனை சபை தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி பின்பற்றுகின்ற வழி முறைகள் சிறந்த மற்றும் நியாயமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு காரணமாக அமையுமென்று ஆலோசனை சபையின் உறுப்பினர் நாயக்கமேலும் படிக்க...