Day: July 12, 2020
பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகனுக்கும் கொரோனா தொற்று!
இந்தியாவின் பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இன்று (சனிக்கிழமை) உறுதிசெய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அமிதாப் பச்சனுக்கு 77மேலும் படிக்க...
தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாரிய மனிதப் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. இதனையடுத்து, நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ஆம்மேலும் படிக்க...
தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நாளை (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகின்றன. தபால் மூல வாக்களிப்புக்காக ஏழு நாட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய நாளை, நாளை மறுதினம் மற்றும் 1, 16, 17ஆம் திகதிகளிலும் எதிர்வரும்மேலும் படிக்க...
சிறுபான்மை இன மக்களைக் கண்காணிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடவில்லை – அரசாங்கம்
இலங்கையில் சிறுபான்மை இன மக்களைக் கண்காணிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைகளுக்கான சுதந்திரம் குறித்து ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் என் வுயுல் கருத்து தெரிவித்திருந்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறித்து,மேலும் படிக்க...
ஞானசாரரின் முகப்புத்தகம் முடக்கம்- மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் முகப்புத்தகம் முடக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அதுரலிய ரத்தன தேரர் ஆணைக்குழுவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,மேலும் படிக்க...
பொதுஜன பெரமுன தனது தேர்தல் பிரசாரங்களை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தங்களது தேர்தல் பிரசாரங்களை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் பொதுஜன பெரமுனவினால் நடத்தப்படவிருந்த கூட்டங்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர்மேலும் படிக்க...