Main Menu

8,000இற்கும் அதிகமான கைதிகளை விடுவிக்க உள்ளதாக கலிபோர்னியா அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து 8,000இற்கும் அதிகமான கைதிகளை விடுவிக்கவுள்ளதாக கலிபோர்னியா அரசு அறவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள கலிபோர்னியா சிறைத்துறை அதிகாரிகள், கலிபோர்னியாவில் 8,000இற்கும் அதிகமான சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கான தகுதியுடன் உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

மேலும் கொரோனா நெருக்கடி காலத்தில் முன்னர் எடுத்த நடவடிக்கைகளின்படியே இதுவும் எடுக்கப்படவுள்ளது என்றும் சிறையில் தடுத்துவைத்துள்ள நபர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் நீடித்து வந்தபோதிலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவில் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவை டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் புழக்கம் அதிகரித்தது.

குறிப்பாக புளோரிடா, டெக்சாஸ், அரிசோனா, கலிபோர்னியா ஆகிய மாகாணங்களில் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியா, நியூயோர்க், டெக்சாஸ், புளோரிடா மாகாணங்களில் 2 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...