Day: May 16, 2020
தடுப்பூசி கண்டு பிடிக்கப்படா விட்டாலும் இயல்பு நிலைக்கு திரும்புவோம்: ட்ரம்ப் பேச்சு!
தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் அமெரிக்கர்கள் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை தோட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனாமேலும் படிக்க...
ஜனாதிபதியுடன் முரண்பாடு? பதவியை இராஜிநாமா செய்தார் பிரேஸில் சுகாதாரத்துறை அமைச்சர்!
பிரேஸில் கடுமையான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் திடீரென தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். பிரேஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்ற நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் நெல்சன் டைக்கின்மேலும் படிக்க...
காதல் பட்டாம்பூச்சி போன்றது – த்ரிஷா!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷா கொரோனா விடுமுறை காலப்பகுதியில் இரசிகர்களுடன் உரையாடி வருகிறார். இதன்போது இரசிகர்களின் ஏராளமான கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், காதலை பட்டாம்பூச்சியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். காதல் குறித்து கருத்து தெரிவிக்கும் த்ரிஷா, ‘நான்மேலும் படிக்க...
ஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு 800 மில்லியன் டொலர்கள் செலவாகும்!
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு, சுமார் 800 மில்லியன் டொலர்கள் செலவாகும் என சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பேச் தெரிவித்துள்ளார். பொதுவாக போட்டிக்கான செலவை போட்டியை நடத்தும் நாடு,மேலும் படிக்க...
பிரான்ஸில் வரலாறு காணாத அளவு வீதி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
பிரான்ஸில் வரலாறு காணாத அளவு வீதி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில், வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில், 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 55.8 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. 2020ஆம் ஆண்டுமேலும் படிக்க...
பயணக் கட்டுப் பாடுகளை எளிதாக்குகிறது இத்தாலி!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை, இத்தாலிய அரசாங்கம் எளிதாக்கவுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜூன் 3ஆம் திகதி முதல் பிராந்தியங்களுக்கிடையில் சுதந்திரமாக செல்ல இத்தாலியர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன் சர்வதேச பயணமும் அனுமதிக்கப்படுகின்றது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக இத்தாலிமேலும் படிக்க...
ஸ்பெயினிலிருந்து வருபவர்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள்: பிரான்ஸ்
ஸ்பெயினின் எல்லைக் கட்டுப்பாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், பிரான்ஸ் புதிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. ஸ்பெயின் தனது எல்லைகளிற்கு வெளியே இருந்து வருபவர்களைத் 10 நாட்கள் தனிமைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தநிலையில், ஸ்பெயினிலிருந்து பிரான்ஸிற்குள் வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளதாகத் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்துமேலும் படிக்க...
தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: வைகோ
தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் நடைபெற்றுவந்த ஆயுதப் போராட்டம் நிறைவுக்கு வந்த மே 18ஆம் நாளின் 11 வருட நிறைவு நெருங்கியுள்ள நிலையில் வைகோ இக்கருத்தினைமேலும் படிக்க...
வெளிமாநிலத் தொழிலாளர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கும் பொறுப்பை தமிழக அரசு ஏற்றது
வெளிமாநிலத் தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்றுக்கொண்டுள்ளதால் தன்னிச்சையாகவோ, நடைபயணமாகவோ பிறவாகனங்களின் மூலமாகவோ, செல்லவேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 6ஆம் திகதி தொடங்கிமேலும் படிக்க...
தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் போது அபிவிருத்திகளும் சேர்ந்து கிடைக்க வேண்டும்- உமாசந்திரா பிரகாஷ்
தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைக்கும்போது அபிவிருத்திகளும் சேர்ந்து கிடைக்கவேண்டும் என மூத்த ஊடகவியலாளரும் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட வேட்பாளருமான உமாசந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார். இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதிப் பங்களிப்பில் கிளிநொச்சி, சாந்தபுரம் கிராமத்தில் வாழும் தெரிவுசெய்யப்பட்டமேலும் படிக்க...
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
இந்நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை 936 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் இதுவரை 520 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 407 பேர் வைத்தியசாலைகளில்மேலும் படிக்க...
சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றி வியாபார நடவடிக்கையில் ஈடுபடுமாறு கொட்டகலை நகரிலுள்ள வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொட்டகலைமேலும் படிக்க...