Day: March 20, 2020
நீஸ் – 20h00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு
இன்று இரவு 20h00 மணியிலிருந்து நீஸ் நகரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கிய சேவைகளான மருந்தகங்கள் முதற்கொண்டு அனைத்தும் 20h00 மணிக்கு முதல் பூட்டப்படுவதோடு மக்கள் யாரும் வெளியே வருவது தடைசெய்யப்பட்டுள்ளது. மருத்துவ வாகனங்கள், மருத்துவப் பணியாளர்கள், வயதானவர்களைப் பராமரிப்பவர்கள் போன்றமேலும் படிக்க...
கொரோனா: இறந்தவர்கள் தொகை 450 இனைத் தாண்டியுள்ளது
இன்று மட்டும் புதிதாக 108 பேர் சாவடைந்துள்ள நிலையில், பிரான்சில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இறந்தவர்கள் தொகையானது 450 இனைத் தாண்டியுள்ளது. இன்று மட்டும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகையானது 1861 ஆகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மொத்தமான 12,612 பேர் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்மேலும் படிக்க...
முப்படையினரைக் கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது – ராஜித
யுத்தத்தை நிறைவு செய்ததைப் போன்று முப்படையினரைக் கொண்டு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்குமேலும் படிக்க...
மக்கள் ஊரடங்கிற்கு கமல்ஹாசன் வரவேற்பு
பிரதமர் மோடி அறிவித்துள்ள மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தனது திரைத்துறை நண்பர்களையும் ஆதரவு தருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மக்கள் ஊரடங்கிற்கு தனது முழு ஒத்துழைப்பை தருவதாகவும்,மேலும் படிக்க...
கொரோனா வதந்தி: ஹீலர் பாஸ்கர் கைது
கொரோனாவுக்கு இயற்கை மருத்துவம் சொல்வதாக கூறி மக்களை குழப்பும் வகையில் வதந்தி பரப்பி வந்த ஹீலர் பாஸ்கர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சின்னகவுண்டர் படத்தில் வரும் நகைச்சுவை நடிகர் செந்தில் போல, ஏட்டிக்கு போட்டி பேசிக்கொண்டு மரபு வழி மருத்துவர் எனமேலும் படிக்க...
வெளி நாட்டவர்கள் இன்று முதல் அவுஸ்ரேலியா விற்குள் நுழையத் தடை!
அவுஸ்ரேலியாவிற்குள் வெளிநாட்டவர்களும் அவுஸ்ரேலிய பிரஜைகள் அல்லாதவர்களும் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) முதல் இந்த தடை அமுலுக்கு வரவுள்ளதாக பிரதமர் ஸ்கொட்மொறிசன் அறிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 80 வீதமானவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுடன் தொடர்புகொண்டவர்களாவோ அல்லது வெளிநாட்டவர்களுடன் நேரடி தொடர்பினை வைத்திருந்தவர்களோவோ காணப்படுகின்றனர்மேலும் படிக்க...
கொரோனா – பல்கேரியாவில் வைத்தியர்கள், செவிலியர்கள் இராஜினாமா!
பல்கேரிய தலைநகர் சோபியாவில் உள்ள இரண்டு வைத்தியசாலைகளில் அதிகளவான வைத்தியர்கள் மற்றும் செவிலியர்கள் இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறப்பட்டதையடுத்தே அவர்கள் இவ்வாறு இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நோயாளர்களுக்கு சிகிச்சைமேலும் படிக்க...
லண்டன் முழுவதுமுள்ள பப்கள், உணவகங்களை மூட உத்தரவு
கொரோனா வைரஸ் வெடிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக லண்டன் முழுவதும் உள்ள பப்கள், உணவகங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் முதலான அனைத்தையும் மூடுவதற்கு உத்தரவிடப்படவுள்ளது. இன்று பிற்பகல் நடைபெறும் செய்தியாளர் மாநாட்டில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இந்தக் கடுமையானமேலும் படிக்க...
உண்மையை மறைத்ததால் உலகம் மிகப்பெரிய விலையைக் கொடுக்கிறது- சீனா மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு!
கொரோனா வைரஸ் குறித்த உண்மையை சீனா மறைத்ததால் உலகம் மிகப்பெரிய விலையைக் கொடுத்துவருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவிமேலும் படிக்க...
வவுனியாவில் இருவர் கைது!
வவுனியா பொலிஸாரால் இரு இளைஞர்கள் இன்று இரவு அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த இருவரும் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் வவுனியா மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் கடமையில் இருந்த பொலிஸார்மேலும் படிக்க...
மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என எச்சரிக்கை!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறினால் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் காட்டுத்தீ போன்றுமேலும் படிக்க...
சிலரது பொறுப்பற்ற செயற்பாடே நாட்டினை முடக்க காரணம் – மஹிந்த
நாட்டில் வாழும் மக்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் உயிரைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று(வெள்ளிக்கிழமை) நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டமேலும் படிக்க...
சீனாவில் 2ஆவது நாளாக உள்நாட்டில் COVID-19 கிருமித்தொற்று சம்பவம் பதிவாகவில்லை
சீனாவில் இரண்டாவது நாளாகத் தொடர்ந்து உள்நாட்டில் எவருக்கும் COVID-19 கிருமித்தொற்று அடையாளம் காணப்படவில்லை. என்றாலும், வெளிநாட்டிலிருந்து சீனாவுக்குத் திரும்புவோரில் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்படுகிறது. நேற்று வெளிநாட்டிலிருந்து சீனா திரும்பிய 39 பேருக்கு கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களில் குவாங்டொங்கில்மேலும் படிக்க...
‘பிரிட்டிஷ் குடிமக்கள் அரசாங்கத்தின் அறிவுரையை மதித்து நடந்தால்தான், கிருமிப் பரவலிலிருந்து மீள முடியும்- பிரதமர் ஜான்சன்’
பிரிட்டிஷ் குடிமக்கள் அரசாங்கத்தின் அறிவுரையை மதித்து நடந்தால்தான், நாடு கிருமிப் பரவலிலிருந்து மீள முடியும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் ( Boris Johnson) தெரிவித்துள்ளார். பிரிட்டனில் இதுவரை 3,200க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 140க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். லண்டனில் கிருமிப்மேலும் படிக்க...
கிரீஸிலிருந்து விமானம் மூலம் ஜப்பான் செல்லும் ஒலிம்பிக் சுடர்
கிரீஸிலிருந்து ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்லும் விமானம் இன்று ஜப்பானின் மியாகி (Miyagi) நகரைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 121 நாள்கள் அது ஜப்பான் முழுவதும் எடுத்துச் செல்லப்படும். உலக அளவில் COVID-19 கிருமிப் பரவல் அதிகரித்து வரும் நிலையில்,மேலும் படிக்க...
பிரான்ஸில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 327ஆக உயர்வு!
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றினால், பிரான்ஸில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 327ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 108பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரே நாளில் 1861இனால் அதிகரித்து மொத்மாக 10,995ஆக உயரந்துள்ளது.மேலும் படிக்க...
கொரோனாவுக்கு மலேரியா மருந்தை பயன்படுத்தி கொள்ள அமெரிக்கா அனுமதி!
கொரோனாவிற்கு தடுப்பு மருந்தாக மலேரியா நோய் தடுப்பு மருந்தை பயன்படுத்தி கொள்ள அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸினால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளும் இந்த நோயைமேலும் படிக்க...
நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு அரசிடம் கோருவோம் – சுமந்திரன்
நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமை காரணமாக நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டிய தேவையை ஏற்படுமாக இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு அரசிடம் கோரும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(வியாழக்கிழமை)மேலும் படிக்க...
கொரோனா வைரஸால் – சிறை கைதிகள் விடுதலை!
அமெரிக்காவின் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து கைதிகளை விடுதலை செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. “சிறு குற்றங்கள் செய்த கைதிகளை” நியூயார்க் விடுவிப்பதாக அந்த நகரத்தின் மேயர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் மற்றும் கிளைவ்லேண்ட்மேலும் படிக்க...