Main Menu

கொரோனா: இறந்தவர்கள் தொகை 450 இனைத் தாண்டியுள்ளது

இன்று மட்டும் புதிதாக 108 பேர் சாவடைந்துள்ள நிலையில், பிரான்சில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இறந்தவர்கள் தொகையானது 450 இனைத் தாண்டியுள்ளது.  இன்று மட்டும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகையானது 1861 ஆகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மொத்தமான 12,612 பேர் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5226 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாவடைந்தவர்களில் 87சதவீதத்தினர் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்சின் இறப்புவீதம் பெரும் ஆபத்தை உணர்த்தி நிற்கின்றது.

பகிரவும்...