கொரோனா – பல்கேரியாவில் வைத்தியர்கள், செவிலியர்கள் இராஜினாமா!
பல்கேரிய தலைநகர் சோபியாவில் உள்ள இரண்டு வைத்தியசாலைகளில் அதிகளவான வைத்தியர்கள் மற்றும் செவிலியர்கள் இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறப்பட்டதையடுத்தே அவர்கள் இவ்வாறு இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக தமக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அரசாங்கத்தினால் உரிய வகையில் வழங்கப்படவில்லை என தாதியர்களும், செவிலியர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பல்கேரியாவில் தற்போது 82 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.