Main Menu

சீனாவில் 2ஆவது நாளாக உள்நாட்டில் COVID-19 கிருமித்தொற்று சம்பவம் பதிவாகவில்லை

சீனாவில் இரண்டாவது நாளாகத் தொடர்ந்து உள்நாட்டில் எவருக்கும் COVID-19 கிருமித்தொற்று அடையாளம் காணப்படவில்லை.

என்றாலும், வெளிநாட்டிலிருந்து சீனாவுக்குத் திரும்புவோரில் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்படுகிறது.

நேற்று வெளிநாட்டிலிருந்து சீனா திரும்பிய 39 பேருக்கு கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களில் குவாங்டொங்கில் (Guangdong) 14 பேருக்கும், ஷாங்ஹாயில் (Shanghai) 8 பேருக்கும், பெய்ஜிங்கில் 6 பேருக்கும் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

COVID-19 கிருமிப் பரவல் உருவெடுத்ததாக நம்பப்படும் வூஹான் நகரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக எவருக்கும் புதிதாக கிருமித்தொற்று அடையாளம் காணப்படவில்லை.

சீனாவில் இதுவரை கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை சுமார் 81,000.

கிருமித்தொற்று காரணமாக மூவர் மாண்டனர்.

அவர்களையும் சேர்த்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3,250. 

பகிரவும்...