Day: September 5, 2019
அமேசன் காட்டு தீ – பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைப்பு!
அமேசன் காட்டு தீயிணை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். பொலிவியாவிற்கு இவ்வாறு 46 பிரான்ஸ் வீரர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இவர்களுடன் ஆறு இராணுவ வீரர்கள் அனுப்பிமேலும் படிக்க...
பிரதமர் ஜோன்சனின் சகோதரர் பதவி விலகினார்!
வணிக அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகுவதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் இளைய சகோதரரான ஜோ ஜோன்சன் சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். குடும்ப விசுவாசத்திற்கும் தேசிய நலனுக்கும் இடையில் முரண்பட்டுள்ள காரணத்தால் பதவி விலகுவதாகவும் தனது பதவியில் தீர்க்கமுடியாத பதற்றம் காணப்படுவதாகவும்மேலும் படிக்க...
சிரியாவில் அதிகரிக்கும் உள்நாட்டு போர் – ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!
சிரியாவில் அதிகரிக்கும் உள்நாட்டு போர் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலிலேயே இவ்வாறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜெனீவாவில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய போதே ஐ.நா மனித உரிமை அமைப்பின் தலைவர்மேலும் படிக்க...
நியுசிலாந்தில் கோர விபத்து – ஆறு பேர் உயிரிழப்பு!
நியுசிலாந்தில் இடம்பெற்ற கோர விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரொட்டோருவா நகருக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான பேருந்தில் அதிகளவான சீனர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், குறித்த பேருந்துமேலும் படிக்க...
திருக்கோணேஷ்வரரை தரிசித்தார் எஸ்.பி.பி
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திருகோணமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். திருகோணமலைக்கு இன்று (வியாழக்கிழமை) சென்ற அவர், திருக்கோணேஷ்வரம் ஆலயத்திற்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார். அத்தோடு அங்கு பிரசித்துப் பெற்று விளங்கும் இராவணன் கல்வெட்டையும் பார்வையிட்டார். இலங்கைக்கு வருகைத்மேலும் படிக்க...
எனது ஆட்சிக் காலத்திலேயே நீதித்துறை சுயாதீனமாக செயற்படுகிறது – ஜனாதிபதி
நீதித்துறைக்கு அரசியல் அழுத்தங்கள் மற்றும் தலையீடுகளின்றி சுயாதீனமாகவும் பக்க சார்பின்றியும் தீர்ப்புக்களை வழங்கக்கூடிய சுதந்திரமானதொரு சூழல் எனது ஆட்சிக் காலத்திலேயெ காணப்படுகிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது நாட்டின் நீதித்துறைக்கும் நாட்டு மக்களுக்கும் கிடைத்த விசேடமான வரப்பிரசாதமாக கருதுவதாகவும்மேலும் படிக்க...
டொரியன் புயலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு!
அமெரிக்காவினை அச்சுறுத்தும் டொரியன் புயலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் பஹாமா, அகோபா தீவுகளை தாக்கிய டொரியன் புயலினால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த புயல் பஹாமா, அகோபா தீவு பகுதியில் கரையை கடந்தபோது, மணிக்கு 295 கிமீமேலும் படிக்க...
ப.சிதம்பரத்திற்கு முன்பிணை வழங்கியது சிறப்பு நீதிமன்றம்!
ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப .சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் ஆகியோருக்கு முன்பிணை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.மேலும் படிக்க...
” புனிதத்தாய் அன்னை திரேசா ” (நினைவுக்கவி)
அன்பின் உருவமாய் ஆற்றலின் வடிவமாய் பண்பின் சிகரமாய் பாசத்தின் உறைவிடமாய் தொழு நோயாளிகளின் கொழு கொம்பாய் பழுக்களைச் சுமந்து பாவிகளை ஆதரித்து புகலிடம் கொடுத்த புனிதத்தாய் அன்னை திரேசா புரட்டாதித் திங்கள் ஐந்தில் இவ்வுலகை விட்டு நீங்கினாரே ! இனமொழி கடந்துமேலும் படிக்க...
நல்லாட்சி அரசாங்கத்தின் பிளவே புதிய அரசியலமைப்பு முடங்க காரணம் – சுமந்திரன்
நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்ட பிளவே புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முடங்குவதற்கு காரணமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த செவ்வியில், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முடக்கப்பட்டதற்கான காரணம்மேலும் படிக்க...