Main Menu

அமேசன் காட்டு தீ – பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைப்பு!

அமேசன் காட்டு தீயிணை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

பொலிவியாவிற்கு இவ்வாறு 46 பிரான்ஸ் வீரர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இவர்களுடன் ஆறு இராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசனில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது.

மேசன் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டில் இருந்தாலும், பொலிவியா, கொலம்பியா, வெனிசூவெலா உள்ளிட்ட 8 நாடுகளிலும் இந்த காடுகள் பரவி கிடக்கின்றன.

இந்த காட்டில் அரிய வகை மரங்கள், உயிரினங்கள், அபூர்வ விலங்கினங்கள், பூச்சிகள் உள்ளன.

இந்தநிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அமேசன் காட்டில் தீ பற்றியது. மள மளவென காட்டுத் தீ பரவியது. இதனால், பல கி.மீ. தூரத்துக்கு தீ பரவி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

பல உயிரினங்கள், தாவரங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதால் தீயை அணைக்க சுற்றுச் சூழல் அமைப்புகளும் உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...