Day: August 17, 2019
ஜகார்த்தா கடலுக்குள் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை!
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவின் மூன்றில் ஒரு பகுதி கடலுக்குள் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிபுணர்களினால் இந்தோனேசிய அரசாங்கத்திற்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜகார்த்தாவில் சுற்றுச்சுழலைப் பாதுகாப்பதற்கான தற்போதைய நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், எதிர்வரும் 2050ஆம் ஆண்டுக்குள் அந்த நகரத்தின் மூன்றில்மேலும் படிக்க...
மெக்ஸிக்கோவில் விபத்து – ஏழு பேர் காயம்!
மெக்ஸிக்கோவில் இடம்பெற்ற விபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். ஹிடால்கோ மாநிலத்தின் சிமாபன் கலாச்சார மையத்தின் இசைக்குழுவைச் சேர்ந்த சிறுவர்களின் பெற்றோர் பயணித்த வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் படிக்க...
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் உயிரிழப்பு!
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய குறித்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய இராணுவமேலும் படிக்க...
நளினியின் பிணை காலத்தை நீடிக்க சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு வழங்கப்பட்டுள்ள பிணைக்காலத்தை நீடிப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மகள் ஹரித்ராவின் திருமணத்திற்காக ஒரு மாதகாலம் பிணையில் விடுதலையாகியுள்ள நளினி, பிணைக்காலத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிக்குமாறுமேலும் படிக்க...
சிங்கள- பௌத்த கொள்கைகளுடனான ஆட்சியே நாட்டிற்குத் தேவை – சஜித்
சிங்கள- பௌத்த கொள்கைகளுடனான ஆட்சியே நாட்டிற்கு தற்போது தேவைப்படுவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். மேலும், எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்குவது உறுதி என்றும் அவர் கூறினார். அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த 30 அகதிகள் வெளியேற்றம்!
பிரான்ஸின் வடக்கு பரிஸில் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த 30 அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வடக்கு பரிசில் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொலிஸாருடன், பல்வேறு தன்னார்வத் தொண்டர்களும் இணைந்து இந்த வெளியேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. சூடான்,மேலும் படிக்க...
ராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தானே எனவும் தனக்கு பதிலாக, தனது கட்சியிலிருந்து எவரும் களமிறங்கமாட்டார்கள் எனவும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு பதிலாக வேறொரு நபர் களமிறங்குவார் என வீண் வதந்திகளைப் பரப்பமேலும் படிக்க...
ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் வவுனியா விஜயம்
இலங்கைக்கு வந்துள்ள மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் இன்று வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளை பார்வையிட்டார். உதிர்த்த ஞாயிறுதினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து நீர்கொழும்பில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்மேலும் படிக்க...
யாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்
யாழ்ப்பாணம் .வல்வெட்டித்துறை- ஊரிக்காடு பகுதியில் இராணுவத்தினர் மீது இளைஞர் குழுவொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணியளவில், ஊரிக்காடு பகுதியிலுள்ள இராணுவத்தினரின் கடையொன்றில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து இந்த தாக்குதலின்மேலும் படிக்க...