Main Menu

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் உயிரிழப்பு!

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய குறித்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய இராணுவ வீரரான லான்ஸ் நாயக் சந்தீப் தாபா என்பவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் இதுவரை இராண்டு இராணுவ வீரர்கள் உள்பட குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...