Main Menu

நளினியின் பிணை காலத்தை நீடிக்க சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு வழங்கப்பட்டுள்ள பிணைக்காலத்தை நீடிப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது மகள் ஹரித்ராவின் திருமணத்திற்காக ஒரு மாதகாலம் பிணையில் விடுதலையாகியுள்ள நளினி, பிணைக்காலத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிக்குமாறு வலியுறுத்தி உள்துறை செயலாளர், சிறைத்துறை தலைவர் ஆகியோருக்கு மனுவொன்றை  அனுப்பியிருந்தார்.

குறித்த மனு இன்று (சனிக்கிழமை) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அத்துடன் லண்டனில் உள்ள ஹரித்ராவுக்கு செப்டம்பர் மாதம் வரை தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வு முடிந்த பிறகு தான் தமிழகத்திற்கு வரவுள்ளார் என முன்னதாக தகவல் வெளியாகியிருந்தது.

இதற்கிடையே நளினிக்கு வழங்கப்பட்டுள்ள பிணை காலம் நிறைவடையவுள்ளது. இதன்காரணமாக பிணை காலத்தை நீடிக்ககோரி நளினி தரப்பில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...