Main Menu

13 நாட்கள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார் முதல்வர் பழனிசாமி!

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, 13 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட குழு, நாளை (செவ்வாய்க் கிழமை) நாடு திரும்பவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

டுபாயில் இருந்து புறப்பட்டு நாளை அதிகாலை 2.40 மணிக்கு, அவர்கள் சென்னை திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒகஸ்ட் 28ஆம் திகதி முதல்வர் பழனிசாமி இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றார். அவருடன் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட குழுவும் சென்றது. 3 நாட்கள் லண்டனில் தங்கி இருந்த அவர், முதலீட்டாளர்களையும் தமிழ் அமைப்புகளை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, லண்டனில் இருந்து கடந்த 1ஆம் திகதி அமெரிக்கா சென்று, அங்கு பல்வேறு தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் 5,050 கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் தொழில் தொடங்க 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு 7ஆம் திகதி இரவு டுபாய் சென்ற அவர், 2 நாட்கள் அங்கு தொழில்முனைவோர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், 13 நாட்கள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு நாளை, நாடு திரும்பவுள்ளார்.

பகிரவும்...